21 புனித அந்தோணியார் ஆலயம், பூட்டேற்றி


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : பூட்டேற்றி

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்கு தளம்

கிளைகள் :

1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தெருவுக்கடை.
2. புனித குழந்தை தெரசாள் ஆலயம், பாலூர் (திரேஸ்புரம்)

குடும்பங்கள் : 330
அன்பியங்கள்: 9

பங்குத்தந்தை (2018) :அருட்பணி ஆன்றணி பாஸ்கர்.

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணிக்கு.

திருவிழா : பெப்ரவரி மாதத்தில் சாம்பல் புதனுக்கு முந்தைய ஞாயிறு முடிகின்ற வகையில் பத்து நாட்கள்.

சிறப்புகள் :

1940 ல் உருவான இப் பங்கானது புதுக்கடை ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்தது. 1941 -1950 வரை இனையம் பங்கின் கிளையாகவும் தொடர்ந்து 1951 முதல் 1956 வரை மங்கலகுன்று பங்கின் கிளையாகவும் இருந்தது. பின்னர் 10-06-1956 ல் தனிப் பங்காக உருவானது.

இவ் ஆலய 9ம் திருவிழாவின் காலைத் திருப்பலியானது முதியோர்களுக்காக சிறப்பாக ஒப்புக் கொடுக்கப் படுகிறது. பங்கின் இளையோர் மற்றும் வின்சென்ட் டி பால் சபையினர் , முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர் மற்றும் ஊரில் வாழுகின்ற முதியோர்களை அழைத்து வந்து திருப்பலியில் பங்கு பெறச் செய்து, மகிழ்வின் அன்பு விருந்தும் கொடுத்து மீண்டும் அவரவர் இடங்களில் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது மிகவும் பாராட்டுக்குரிய இறைவனின் விருப்பச் செயலாகும்.