232 புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம், சானல்கரை

    

புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம்

இடம் : சானல்கரை, சிற்றார் Dam 2

மாவட்டம்: கன்னியாகுமரி 

மறை மாவட்டம்: குழித்துறை 

மறைவட்டம்: புத்தன்கடை

பங்குத்தந்தை : அருட்பணி. V. வின்சோ ஆன்றனி 

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை

குடும்பங்கள் : 15

அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 11.00 மணிக்கு 

திருவிழா : மே மாதத்தில் மூன்று நாட்கள். 

வழித்தடம்: மார்த்தாண்டம் -மேல்புறம் -அருமனை -களியல் -கடையாலுமூடு -ஆலஞ்சோலை -சானல்கரை.

வரலாறு:

ஆலஞ்சோலை தூய லூர்து அன்னை ஆலயத்திற்கு வடக்குத்திசையில் இரப்பர்  மரங்கள் அடர்ந்த பகுதிதான் சானல்கரை. இங்கு சிற்றார் அணை ஒன்றையும், சிற்றார் அணை இரண்டையும் இணைக்கும் ஒரு சானல் உள்ளதால், இவ்வூர் 'சானல்கரை' எனப் பெற்றது.

ஆரம்பத்தில் இங்கு வசித்து வந்த திரு. தனிஸ்லாஸ் என்பவர் தன் குடும்பத்தோடு ஆலஞ்சோலை தூய லூர்து அன்னை ஆலயம் வந்து, நீண்ட நாட்களாகத் திருப்பலியில் பங்கெடுத்து வந்துள்ளார்கள். பின்னர் இதே பகுதியில் வசித்து வந்த திரு, ஜாண்றோஸ், திரு. இராயப்பன் மற்றும் சிலர் ஆலஞ்சோலை தூய லூர்து அன்னை ஆலயம் வந்து திருப்பலியில் பங்கெடுத்து வந்துள்ளார்கள். எட்டு அன்பியங்களைக் கொண்ட ஆலஞ்சோலை தூய லூர்து அன்னை ஆலயம், இவர்களை 9-ஆம் அன்பிய இறைமக்களாக அங்கீகரித்தது. 

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல 9-ஆம் அன்பிய இறைமக்கள் ஆலஞ்சோலைக்கு வந்து திருப்பலியில் பங்கேற்பதை சிரமமாகக் கருதினர்.

இச்சூழலில் கடையல் பங்கைச் சார்ந்த திரு. C. வற்கீஸ் என்பவரும், அப்பங்கு அருட்பணி. மரிய ஜாண்போஸ்கோ மற்றும் அருட்பணி. கிறிஸ்துராஜ் ஆகியோர்களும், திரு. ஜான்றோஸ், திரு. இராயப்பன், திரு. தனிஸ்லாஸ் ஆகியரைச் சந்தித்து அங்கு இறைத்தளம் அமைக்க ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அந்த ஆலோசனைப்படி அருட்பணி. மரிய ஜாண் போஸ்கோ அவர்கள், திரு. ஜாண்றோல் வீட்டில் ஆரம்ப நாட்களில் கூட்டம் நடத்திய பின்னர் வியாழக்கிழமைகளில் திருப்பலியும் நிறைவேற்றி வந்துள்ளார்கள்.

17-09-2007-இல் அருட்பணி. மரிய ஜாண்போஸ்கோ முயற்சியால், திரு ஜாண்றோஸ் அவர்களிடமிருந்து சுமார் 8 ஏர் நிலம் ஆலயம் கட்டுவதற்காக விலைக்கு வாங்கப்பட்டது. 

18-11-2007-ல் அருட்பணி. மரிய ஜாண் போஸ்கோ அவர்களின் முயற்சியாலும் கடையல், ஆலஞ்சோலை இறைமக்களின் அயரா உழைப்பாலும் இறைவனை ஆராதிக்க ஓலைக்குடிசை ஒன்ற இங்கு அமைக்கப்பட்டது.  

மேலும் சானல்கரை இறைமக்களின் மேம்பாட்டிற்காக ஆலஞ்சோலை தூய லூர்து அன்னை ஆலயத்தின் சார்பாக ரூ.15,000, அருட்பணி. பவுல்சாமி மூலம் கொடுக்கப்பட்டது.

மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் வழங்கிய  ரூபாய் 50,000 மற்றும் ஆலஞ்சோலை பங்கு அருட்பணிப் பேரவையினர் வசூலித்த நன்கொடை ஆகியவற்றைக் கொண்டு, அருட்பணி. பவுல்சாமி அவர்களின் அயரா முயற்சியாலும் கடையல், ஆலஞ்சோலை இறைமக்களின் உழைப்பாலும் 11-02-2009- ல் ஆலயம் ஒன்று கட்ட அடித்தளம் போடப்பட்டது.

14-05-2009-ல் ஆலஞ்சோலை தூய லூர்து அன்னை ஆலயத்தை தனிப்பங்காகவும், சுமார் 15 குடும்பங்களை உள்ளடக்கிய சானல்கரை பகுதியை அதன் கிளைப்பங்காகவும், மேதகு ஆயர் அவர்கள் பிரகடனம் செய்தார். இதனால் மிகவும் உற்சாகம் பெற்ற இறைமக்களின் அயரா உழைப்பாலும், அருட்பணி. பவுல்சாமி அவர்களின் ஒத்துழைப்பாலும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலயத்திற்கு அருட்பணி. பவுல்சாமி அவர்கள் புனித

பிரான்சிஸ்கு சலேசியார் ஆலயம் எனப் பெயரிட்டுள்ளார்.

05-08-2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. ஆலயத்தைக் கட்ட அதிகமாக உழைத்த அருட்பணி. பவுல்சாமி அவர்களுக்கு மேதகு ஆயர் அவர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆலயத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஆலஞ்சோலை பங்குத்தந்தை அருட்பணி. ஷெல்லிறோஸ் அவர்களிடம் மேதகு ஆயர் ஒப்படைத்தார். 

தற்போது ஆலஞ்சோலை பங்குத்தந்தை அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்களின் வழிகாட்டுதலால், மக்களின் நிதி பங்களிப்புடன் புதிய ஆலய மணி நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு, ஆலய சுவரில் வேளாங்கண்ணி மாதா கெபியும் அமைக்கப்பட்டது. பங்குத்தந்தையின் வழிகாட்டலில் சானல்கரை இறைமக்கள் ஆன்மீக, கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேறி வருகின்றார்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:  பங்குத்தந்தை அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்கள்.