திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் (இலத்தீன்: Tiruchirapolitan(us)) என்பது திருச்சிராப்பள்ளி ஆரோக்கிய அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
மக்கள் தொகை கத்தோலிக்கர் - 399,740 (2004)
கதீட்ரல் அன்னை மரியா பெருங்கோவில்
வரலாறு
1606: கொச்சின் மறைமாவட்டத்தின் மதுரா மறைபரப்பு பணி மையம் நிறுவப்பட்டது.
1773: நிலை குறைக்கப்பட்டது.
1836: மதுரா மற்றும் சோழமண்டல கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக புதுப்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 1, 1886: மதுரா மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
ஜூன் 7, 1887: திருச்சினோபொலி மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.
அக்டோபர் 21, 1950: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
சிறப்பு ஆலயங்கள்
இணைப் பெருங்கோவில்:
உலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி).
தலைமை ஆயர்கள்
திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் கபிரியேல் லாரன்ஸ் செங்கோல் (அக்டோபர் 6, 1990 – அக்டோபர் 14, 1997)
ஆயர் தாமஸ் பெர்னான்டோ (நவம்பர் 33, 1970 – அக்டோபர் 6, 1990)
ஆயர் ஜேம்ஸ் மென்டொன்சா (அக்டோபர் 21, 1950 – டிசம்பர் 19, 1970)
திருச்சினோபொலி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் ஜேம்ஸ் மென்டொன்சா (மார்ச் 7, 1938 – அக்டோபர் 21, 1950)
ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 2, 1936 – ஜனவரி 8, 1938)
ஆயர் ஆங்கே-அகஸ்டே ஃபைசான்டியர், S.J. (டிசம்பர் 19, 1913 – செப்டம்பர் 24, 1934)
ஆயர் ஜீன்-மரி பார்த், S.J. (மார்ச் 21, 1890 – டிசம்பர் 19, 1913)
ஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (ஜூன் 7, 1887 – டிசம்பர் 2, 1888)
மதுரா மறைமாவட்டத்தின் ஆயர் (இலத்தீன் ரீதி)
ஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (செப்டம்பர் 1, 1886 – ஜூன் 7, 1887)
மதுரா மற்றும் சோழமண்டல கடற்கரை அப்போஸ்தலிக்க பிரதிநிதிகள் (ரோமன் ரீதி)
ஆயர் அலெக்சிஸ் கனோஸ், S.J. (ஏப்ரல் 25, 1846 – செப்டம்பர் 1, 1886)
ஆயர் கிளமென்ட் பொன்னான்ட், M.E.P. (அக்டோபர் 3, 1836 – ஏப்ரல் 3, 1850)
ஆயர் லூயிஸ்-சார்லஸ்-அகஸ்டே ஹெபெர்ட், M.E.P. (ஜூலை 8, 1836 – அக்டோபர் 3, 1836)
நன்றி: விக்கிபீடியா