612 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், வடுகப்பாளையம்

   

புனித வனத்து சின்னப்பர் ஆலயம் 

இடம் : வடுகப்பாளையம்

மாவட்டம் : நாமக்கல் 

மறைமாவட்டம் : சேலம் 

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி 

பங்குத்தந்தை : அருட்பணி. K. பிரசன்னா 

குடும்பங்கள் : 25

வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணிக்கு திருப்பலி 

திருவிழா :  ஜனவரி மாதத்தில் 

வழித்தடம் : சோழசிராமணியிலிருந்து, ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் வடுகப்பாளையம் உள்ளது. 

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான வடுகப்பாளைத்தில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலய வரலாற்றைக் காண்போம். 

வடுகப்பாளையத்தில் புதிதாக கிறிஸ்தவம் தழுவிய மக்களை நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி. மத்தேயு தெக்கடம் (1933-1935) (1942-1943) அவர்கள் வழிநடத்தி வந்தார்கள். இக்காலகட்டத்தில் மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக புனித வனத்து சின்னப்பர் ஆலயம் கட்டப்பட்டது. 

1946 ஆம் ஆண்டு நாமக்கல் பங்கிலிருந்து, பெருங்குறிச்சி தனிப்பங்காக ஆனது முதல் அதன் கிளைப் பங்காக வடுகப்பாளையம் செயல்பட்டு வந்தது. 

பெருங்குறிச்சி பங்கிலிருந்து, சோழசிராமணி 2005 ஆம் ஆண்டு தனிப்பங்காக ஆன போது, அதன் கிளைப் பங்காக வடுகப்பாளையம் ஆனது. 

பழைமையான ஆலயமானது இடிக்கப்பட்டு, சோழசிராமணி பங்குத்தந்தை அருட்பணி. ஞானராஜ் பணிக்காலத்தில் (2015-2018) புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டது. 

தொடர்ந்து பணியாற்றிய தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. K. பிரசன்னா அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 15.01.2019 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. K. பிரசன்னா.