மாவட்டம் : தருமபுரி
மறைமாவட்டம் : தருமபுரி
மறைவட்டம் : அரூர்
நிலை : பங்குதளம்
பங்குத்தந்தை : அருட்பணி. அருள்ஜோதி
குடும்பங்கள் : 850
அன்பியங்கள் : 21
திருவிழா : தவக்காலத்தின் 9- வது வாரம் வருகிற வெள்ளிக்கிழமை கெபி திருவிழா. 3 நாட்கள் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மாலை மாசற்ற இரத்தம் ஒலி, ஒளி காட்சியானது சிறப்பாக நடத்தப்படுகிறது. இது ஏழு மணி நேரம் பழைய ஏற்பாடு நிகழ்விலிருந்து, இயேசுவின் பாடுகள் மற்றும் விண்ணேற்பு நிகழ்வு வரை சிறப்பாக அரங்கேற்றப் படுகிறது. இதனைக் காண பல பகுதிகளில் இருந்தும் இறைமக்கள் (குறிப்பாக பெங்களூரு, சென்னை, மைசூர், கேரளா) வருகை தருகின்றனர்.
கொடியேற்றத்திலிருந்து 9 நாட்கள் நவநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மற்றும் காலை 08.30 மணிக்கும்
திங்கள் திருப்பலி : காலை 06.15 மணிக்கு
செவ்வாய் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் குருசடியில்
புதன் : காலை 06.15 மணிக்கு திருப்பலி, புனித சூசையப்பர் நவநாள்
வியாழன் : மாலை 06.00 மணிக்கு குழந்தை இயேசு நவநாள், செபம், திருப்பலி
வெள்ளி திருப்பலி : காலை 06.15 மணிக்கு
சனிக்கிழமை : தூய லூர்து அன்னை கெபி திருத்தலத்தில் மாலை 06.00 மணிக்கு செபமாலை, மரியாள் மன்றாட்டு, திருப்பலி
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி, ஆடம்பரத் திருப்பலி
ஒவ்வொரு மாதத்தின் 23-ம் தேதி தூய லூர்து அன்னை கெபி திருத்தலத்தில் தேர்பவனி (ஜூன் 23-ம் தேதி மாதா சுரூபம் கண் அசைந்து காட்சி கொடுத்ததன் நினைவாக)
மாதத்தின் 3-வது ஞாயிறு மாலை 04.00 மணிக்கு, புனித வனத்து சின்னப்பர் ஆலயம், அஜ்ஜம்பட்டி -யில் திருப்பலி.
மண்ணின் இறையழைத்தல்கள் :
2. Fr அகஸ்டின் நாதன் (சலேசியன்)
3. Fr அதிரூபன்
4. Fr வேதநாயகம் (கப்புசின்)
5. Fr அமலநாதன்
6. Fr ஆன்ட்ரூஸ் அலெக்ஸ்
7. Fr சுரேஷ் (ஆப்பிரிக்கா)
8. Fr பாரத் சின்னப்பன்
9. Fr பாரத் நாயகம்
10. Fr மோசஸ்
11. Fr கோபி இம்மானுவேல்
12. Fr ஆபிரகாம்
Brothers :
2. Bro குபேந்திரன்
3. Bro பாஸ்கர்
அருட்சகோதரிகள் :
2. Sis மார்கிரேட்
3. Sis விக்டோரியா
4. Sis ஜெசிந்தா
5. Sis அருள் செசிலி கிளாடியா
6. Sis அமலராணி
7. Sis மேரி சங்கீதா
8. Sis மரிய அலக்ஸியா
9. Sis அருள் ஜோதி
10. Sis மேரி ஜாக்குலின்
11. Sis அமலோற்பவ மேரி
12. Sis மோட்ச அலங்காரம்
13. Sis சுபா
14. Sis கிளேசியா
15. Sis தூயநாயகி
16. Sis ஜெனிபர்
Location map: https://maps.app.goo.gl/PCwEEx6ZgTgWCqpp7
வழித்தடம் :
Train route
சென்னை - சேலம் வண்டி
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வழி இறங்குமிடம் பொம்மிடி.
Bus route :
சேலம் - தருமபுரி பேருந்து வழி பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி இறங்குமிடம் B. பள்ளிப்பட்டி.
சென்னை - சேலம் பேருந்து
அரூர், ஊத்தங்கரை வழித்தடம் சாமியாபுரம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பொம்மிடி பேருந்தில் பயணித்து, B. பள்ளிப்பட்டியில் இறங்கினால் இவ்வாலயத்தை வந்தடையலாம்.
வரலாறு:
லூர்து அன்னையின் அருள் சுரக்கும் அழகான மசேபியேல் கெபியைக் கொண்ட B.பள்ளிப்பட்டி, 4-8-1930 அன்று கோவிலூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப்பங்கானது. பொம்மிடி, தென்கரைக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மோரூர் ஆகியவை இதன் கிளைப்பங்குகளாயின. 1930-ஆம் ஆண்டு சேலம் மறைமாவட்டம் உருவானபோது, குடந்தை மண்ணில் பணியாற்றிய பாரீஸ் மறைபரப்பு சபை குருக்கள் சேலம் மறைமாவட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டனர். கும்பகோணம் மறைமாவட்டம் கொணலை என்ற பங்கில் பணியாற்றிய அருள்திரு. சார்லஸ் டெவின், MEP அவர்கள் பள்ளிப்பட்டி பங்கின் முதல் பங்குத்தந்தையானார்.
வளர்ச்சி:
பள்ளிப்பட்டியில் கிறிஸ்தவ விசுவாசத்தை விதைத்தவர்கள் மைசூர் மறைப்பணித்தளத்தை சேர்ந்த இயேசு சபை மறைப்பணியாளர்களே ஆவர். 1750 ஆம் ஆண்டுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் பள்ளிப்பட்டியில் வாழ்ந்ததாக அறிகிறோம். 1750 ஆம் ஆண்டில் இலளிகம் (லலிகம்) என்ற ஊரில் தங்கி, கோவிலூர் பங்கைச் சேர்ந்த மக்களுக்காக பணி செய்தவர் அருள்திரு. திமோத்தி சேவியர் என்ற இயேசு சபை குருவானவர். அவர் பொறுப்பில் விடப்பட்ட ஊர்களின் பட்டியலில் பள்ளிப்பட்டியும் உள்ளது.
1843-44 ஆம் ஆண்டில் கோவிலூரில் உதவி பங்குத்தந்தையாக பணியாற்றியவர் அருள்திரு. மரியான் பிரசியாக், MEP அவர்கள் தாம் பயணம் செய்த ஊர்களின் பட்டியலில் பள்ளிப்பட்டியையும் குறிப்பிடுகிறார். 1850 ஆம் ஆண்டு கணக்குப்படி பள்ளிப்பட்டியில் 288 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். 1858 ஆம் ஆண்டில் சேலம், தருமபுரி பகுதிகளை இணைத்து பணியாற்றிய அருள்தந்தை குயோன் (Pierre Gouyon) அடிகளாரின் முயற்சியால், ஏழு குடும்பங்கள் திருமுழுக்கு பெற்றனர். 1861-1864ஆம் ஆண்டுகளில் கோவிலூர் பங்குதந்தை திரியோன் அடிகளாரின் மக்கள் நலப்பணிகளால், 23 பேர் பள்ளிப்பட்டியில் திருமுழுக்குப் பெற்றனர். இவ்வாறு வளர்ந்து வந்த பள்ளிப்பட்டி 1930 ஆம் ஆண்டு தனிப்பங்கனாது.
1930 ஆம் ஆண்டு கணக்குப்படி பள்ளிப்பட்டியில் 102 குடும்பங்கள் இருந்தன. முதல் பங்குத்தந்தையான அருள்திரு. சார்லஸ் டெவின் பள்ளிப்பட்டியில் ஆலயம் ஒன்றை கட்டியெழுப்பினார். 18-11-1938 அன்று அவ்வாலயம் புனிதப் படுத்தப்பட்டது. கல்விப் பணிக்கு முன்னுரிமை கொடுத்த தந்தை சார்லஸ் டெவின், 2-6-1932 அன்று தூய மரியாள் துவக்கப்பள்ளியைத் துவங்கினார். 15 ஆண்டுகள் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய இவர் 11-3-1945 அன்று இறைவனடி சேர்ந்தார். 14-3-1945 அன்று அவர் கட்டியெழுப்பிய ஆலயத்தின் இடப்புறம் அடக்கம் செய்யப்பட்டார்.
1952 முதல் 1958 வரை பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்திரு T.C. ஜோசப் அடிகளாரின் முயற்சியில் 1952 இல் தூய மரியாள் துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. லூர்து அன்னையின் காட்சிகளின் நூற்றாண்டு நினைவாக, மல்லிகார்ஜூனா மலையின் மேற்குப் பகுதியில் லூர்து அன்னை கெபியை உருவாக்கினார். நான்கு அடி உயரம் கொண்ட மாதாவின் சுரூபம் வைக்கப்பட்டு, 20-6-1958 அன்று சேலம் ஆயரால் புனிதப்படுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து பங்குத்தந்தையாக 1958 செப்டம்பர் மாதம், அருள்திரு. மேத்யூ புலிக்கல் பொறுப்பேற்றார். கோவையில் உருவாக்கப்பட்ட 11 அடி மாதா சுரூபத்தையும் சிலுவைப் பாதை நிலைகளையும் அமைத்து, மசேபியேல் மலைக்கு மெருகூட்டியவரும் இவரே. 11 அடி அன்னையின் சுரூபத்தையும், சிலுவைப்பாதை நிலைகளையும் 29-4-1960 அன்று சேலம் ஆயர் புனிப்படுத்தினார். அருள்தந்தை மேத்யூ புலிக்கல் செபமாலை படிக்கட்டுகளையும் அமைத்தார்.
அருள்திரு. தாமஸ் கீராங்சிரா (பங்குத்தந்தை 1963-1972) மசேபியேல் மலையின் அருகில் லூர்துபுரம் என்ற ஊரை அமைத்தார். 11-2-1969 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் சேலம் ஆயர் லூர்துபுரத்தை திறந்து வைத்தார். 1970-ஆம் ஆண்டு மாசற்ற இரத்தம் என்ற இயேசுவின் வரலாற்று நாடகம் முதன்முறையாக நடிக்கப்பட்டது. பின்னர் அருள்தந்தை R. சேவியர் (பங்குத்தந்தை 1972-1978) மலையுச்சியில் உயிர்த்த இயேசுவின் திருவுருவத்தை நிறுவினார். மாசற்ற இரத்தம் நாடகத்தை 1976-இல் ஒளி -ஒலி காட்சிகளாக்கினார். பின்னர் பொறுப்பேற்ற அருள்தந்தை இருதய செல்வம் (பங்குத்தந்தை 1978-1979) மாசற்ற இரத்தம் ஒளி - ஒலி காட்சிகளை மசேபியேல் மலையில் திறந்தவெளிக் காட்சிகளாக்கினார். 1992-இல் அருள்பணி A. சார்லஸ் அடிகளாரின் முயற்சியால், மசேபியேல் மலைப்பகுதியில் 12 ஏக்கர் நிலம் திருத்தலப் பயன்பாட்டிற்காக வனத்துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1997இல் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்திரு ஜெகராஜ் செபமாலைப் படிகளில், தியானிக்க, செபமாலை மறை உண்மைகளை நிறுவினார்.
1983இல் கெபியின் வெள்ளி விழாவை அருள்தந்தை ஜான் ஜோசப் அடிகளாரும், 2008 இல் பொன்விழாவை அருள்திரு. A. ஆரோக்கியராஜ் அடிகளாரும் சிறப்பாகக் கொண்டாடினர்.
1932இல் துவக்கப்பள்ளி, 1952 நடுநிலைப்பள்ளி என வளர்ந்த தூய மரியாள் பள்ளி, 1992 இல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தூய மரியாள் தொடக்கப்பள்ளி என்றும், தூய கார்மேல் உயர்நிலைப் பள்ளி என்றும் செயல்பட ஆரம்பித்தது. தூய கார்மேல் உயர்நிலைப் பள்ளி 2008-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருள்திரு. M. அருள்சாமி அடிகளாரின் முயற்சியால் புதிய பங்கு ஆலயமும், பங்குத் தந்தைக்கான இல்லமும் கட்டப்பட்டன. புதிய ஆலயத்தையும், பங்குதந்தை இல்லத்தையும் 17-11-2011 அன்று தருமபுரி ஆயர் திறந்து வைத்து புனிதப்படுத்தினார்.
2008ஆம் ஆண்டு கெபியின் பொன் விழா நினைவாக கெபியின் கீழ்புறம் சிற்றாலயம் ஒன்று எழுப்பப்பட்டு பணிகள் தொடர்கின்றன.
அருட்சகோதரிகள்:
2003ஆம் ஆண்டு SMMI சகோதரிகள் பள்ளிப்பட்டி, லூர்து புரத்தில் ஆங்கிலப் பள்ளி ஒன்றை நிறுவினர். 2005 ஆம் ஆண்டு வரை பொம்மிடி கன்னியர் இல்லத்திலிருந்து வந்து பள்ளியை நிர்வகித்தனர். 2005ஆம் ஆண்டு முதல் லூர்துபுரத்தில் கன்னியர் இல்லத்தை அமைத்து, மருத்துவமனை ஒன்றையும் நிறுவினர்.
தூய கார்மேல் அன்னையின் வழியாக இறையாசி பெற்றுச் செல்ல பி.பள்ளிபட்டி வாருங்கள்..
