342 தூய மரியன்னை பசிலிக்கா, முளகுமூடு

            

மரியன்னை ஆலயம்.

இடம் : முளகுமூடு

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறை மாவட்டம் : குழித்துறை 

மறை வட்டம் : முளகுமூடு

நிலை : பசிலிக்கா (Minor Basilica)  

கிளைப்பங்கு : தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர் 

பங்குத்தந்தை : அருட்பணி. டோமினிக் M. கடாட்ச தாஸ் 

இணைப் பங்குத்தந்தை : அருட்பணி. தாமஸ்

ஆன்மீகத்தந்தை : அருட்பணி. ஆன்றனி.  

குடும்பங்கள் : 1700

அன்பியங்கள் : 32

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி, காலை 07.30 மணி, மாலை 05.00 மணி. 

வார நாட்களில் திருப்பலி : காலை 06.15 மணிக்கு 

புதன் மாலை 06.15 மணிக்கு ஜெபமாலை, சகாய மாதா நவநாள் 

ஒவ்வொரு பௌர்ணமி நாளில் காலை 10.00 மணிக்கு ஜெபமாலை,  நவநாள், திருப்பலி தொடர்ந்து மதிய உணவு. 

மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு நற்செய்திப் பெருவிழா, குணமளிக்கும் ஜெபவழிபாடு இறுதியாக இரவு உணவும் வழங்கப்படும். 

திருவிழா : செப்டம்பர் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் : 

1. Fr. D. டேவிட் 

2. Fr. C. வென்சஸ்லாஸ் (late) 

3. Fr. P. சுரேஷ்குமார் 

4. Fr. S. லதீஸ் போஸ்கோ

5. Fr. S. காட்வின் செல்வ ஜஸ்டஸ் 

6. Fr. A. ஜோஸ் ஸ்டாலின் 

7. Bro. C. சிங்காராயர் (late) 

அருட்சகோதரிகள்:

1. Sr. அதரியானா 

2. Sr. ஜூலியட் 

3. Sr. றோஸ்ஹரிட்டாஸ்

4. Sr. ஹீபர்ட் மேரி 

5. Sr. புஷ்பா

6. Sr. பெர்னதத் 

7. Sr. சீலியா மேரி

8. Sr. நிர்மலா குளோரி 

9. Sr. எலிசபெத் 

10. Sr. ஜெயா 

11. Sr. அல்போன்ஸ் மேரி 

12. Sr. நட்சத்திரம் (late) 

13. Sr. பிளாறிஸ் 

14. Sr. ஜேம்ஸ் ராணி 

15. Sr. செலஸ்றின் 

16. Sr. அல்போன்ஸ் மேரி 

17. Sr. தெரஸ் ஜூலியா மேரி 

18. Sr. பெல்லா 

19. Sr. மேரி மார்சல் 

20. Sr. பிளவர் லெட் 

21. Sr. அமலி 

அருட்சகோதரர்கள்:

1. Bro. அருண் ஷாஜி

2. Bro. ஷெபின்  

3. Bro. ஜான் ஜிஜோ 

4. Bro. பிருத்வி தாமஸ்

5. Bro. ஷெரில் சாம்

6. Bro. அபிஷ் ரோஜின் 

7. Bro. பிரேம் ததேயு, OCD 

8. Bro. சுபின் 

9. Bro. பெர்பின் பியோ

வழித்தடம் :

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முளகுமூட்டில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location : St.Mary,s Basilica, Mulagumoodu (Our Lady of Nativity)

Mulagumoodu, Tamil Nadu 629167

https://maps.app.goo.gl/mxUM41Aw6t68hqZZA

வரலாறு :

கடல்வளமும், நீர்வளமும், நிலவளமும் நிறையப்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தூய மரியன்னை பசிலிக்கா  அமைந்துள்ளது. குழித்துறை மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும் திரித்துவபுரம், புத்தன்கடை, காரங்காடு, மாத்திரவிளை, வேங்கோடு இவற்றுடன் 6 வது மறை வட்ட தலைமையிடமாக முளகுமூடு விளங்குகிறது. 

பெயர்க் காரணம் :

நல்லமிளகு (மிளகு) அதிகம் விளையும் ஊராக இருந்ததால் 'மிளகுமூடு' எனவும், பின்னர் முளகுமூடு என மருவியது என்று கூறப்படுகிறது. இதனை அருட்தந்தை P. ஆண்டிரியாஸ் OCD அவர்கள், 1929 -ஆம் ஆண்டு முளகுமூட்டின் முதல் பங்குத்தந்தை அருட்தந்தை விக்டர் OCD (பணிக்காலம் 1860-1897) -அவர்களைக் குறித்து டச்சு மொழியில் எழுதிய சரிதை நூலில்  குறிப்பிட்டுள்ளார். 

மேலும் முளகுமூடு சந்திப்பு அருகே முளைகூட்டம் (மூங்கில்) அதிகமாக வளர்ந்திருந்தது. மாட்டு வண்டியில் செல்பவர்கள் முளைமூட்டில் இதன் நிழலில் வண்டிகளை நிறுத்தி  ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம். முளைமூடு பின்னர் முளகுமூடு என திரிவு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

கிறிஸ்தவமும் குமரி மாவட்டமும் :

கிறிஸ்துவின் 12 சீடருள் ஒருவரான புனித தோமையார் கி.பி 52 -இல் இந்தியாவிற்கு வந்து கேரளாவிலும், பின்னர் தமிழகத்தில் குமரி முதல் சென்னை வரையிலும் கிறிஸ்தவ கோட்பாடுகளை பறைசாற்றினார். 

அவருக்குப் பின் மறைப்பரப்பு நாடுகளின் பாதுகாவலர் என போற்றப்படும் ஸ்பெயின் நாட்டு, இயேசு சபை துறவி புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552) இந்தியா வந்து மறைப்பரப்பு பணி செய்தார். 1544 -இல் உண்ணி கேரளவர்மா மன்னன் காலத்தில், அவரது அனுமதியுடன் கோட்டாற்றில் அன்னை மரியாவிற்கு அழகிய ஆலயம் ஒன்றை கட்டினார். 

கோட்டார் மறை மாவட்டம் :

1930 -க்கு முன்புவரை குமரி மாவட்டப் பகுதிகள் கொல்லம் மறை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. 26-05-1930 -இல் கோட்டார் மறை மாவட்டம் உருவானது. 1956 -இல் மொழிவரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழர்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. 

முளகுமூடு ஆலயத் தோற்றம் :

முளகுமூடு என்னும் ஊருக்கு புது வரலாறு படைத்தவர்கள் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை. விக்டர் OCD அவர்களும், அவரது தம்பி அருட்தந்தை யூஜின் OCD அடிகளுமாகும். 

அருட்தந்தை. விக்டர் அவர்கள் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் (அப்போது கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்திருக்கவில்லை) பழைய தலைநகர்  திருவிதாங்கோட்டிற்கு மறைப்பணிக்கு அனுப்பப்பட்டார். அவர், அங்கிருந்து அண்டை ஊராகிய முளகுமூட்டில் தனது அருட்பணியைத் தொடங்கினார். குழந்தை இயேசுவை தலைவராகவும், அன்னை மரியாவை விண்ணரசியாகவும் முன்னிறுத்தி தமது அறப்பணிகளை செய்து வந்தார். 

அருட்தந்தை. விக்டர்  அவர்கள் முளகுமூட்டின் இயற்கை அழகை உணர்ந்து 40 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். குறுகிய காலத்தில் அதை ஏதேன் தோட்டம் போல பொலிவுறச் செய்தார். 

முதலில் வாங்கிய நிலத்தில் தனது தம்பியான அருட்தந்தையுடன் தங்குவதற்காக மணவாளன்பாறையில் ஒரு வீட்டைக் கட்டினார். பின்னர் பெரியவிளை தோட்டத்தில் நான்கு மாடிகள் கொண்ட கோபுர வீடு ஒன்றைக் கட்டி குடியேறினார். தோட்டத்தில் சிறந்த வகை பலா மரங்களை நட்டு வளர்த்தார். பின்னாளில் முளகுமூடு வருக்கை பலாப்பழம் பிரபலமாக அவர் காரணமாக இருந்தார்.

1862- இல் முளகுமூட்டில் புகழ்பெற்ற அனாதைகள் மடத்தை (ஆதரவற்றோர் இல்லம்) அருட்தந்தை விக்டர் அவர்கள் தோற்றுவித்தார். அக்காலத்தில் காலரா, கொள்ளை நோய்களின் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் அனாதைகளாயினர். அருட்தந்தை. விக்டர்,  அவர்களுக்கு தாயாக தந்தையாக இருந்து வாழ்வளித்தார். 

ஓட்டு தொழிற்சாலை :

அருட்பணி விக்டர் அவர்கள் 1883 -இல் ஒரு ஓட்டு தொழிற்சாலையை முளகுமூட்டில் நிறுவி, பால் பர்ணாண்டோ என்னும் இலங்கையைச் சார்ந்தவரை பெங்களூருக்கு அனுப்பி ஓடு தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுவரச் செய்தார். ஓலைக்கூரைகள் ஓட்டுக் கூரைகளாக மாறக்காரணமாக இருந்தார். வேலை வாய்ப்பும் பெருகியது. பத்மநாபபுரம் அரண்மனையில் வேயப்பட்ட ஓடுகள் இங்கு உருவாக்கப்பட்டவை ஆகும். 

அக்கால கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓடு வேய்ந்த வீடு கட்டக்கூடாது என்று உயர்சாதியினர் விதித்திருந்த கட்டளையை உடைத்து சமத்துவம் பேணியவர் அருட்தந்தை விக்டர் அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

I.C.M சபை அருட்சகோதரிகள் :

ஆதரவற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, ஆதரவற்ற இல்லத்திற்கு சேவைபுரிய அருட்சகோதரிகளின் தேவையை உணர்ந்த அருட்தந்தை. விக்டர் அவர்கள், 1887 -இல் தனது தாய் நாடான பெல்ஜியம் நாட்டிலிருந்து அகஸ்தீனியம் சபையை சார்ந்த அருட்சகோதரிகள் மரிய லூயிஸ், மரிய ஊர்சூல் ஆகியோரை வரவழைத்தார். இம் மண்ணின் பணித்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் பெல்ஜியத்திலிருந்து வந்த அருட்சகோதரிகள் ICM (Immaculate Cordis Maria) சபையை தோற்றுவித்து, பணியாற்றி, முளகுமூடு -ஐ தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டார்கள். 

அருட்தந்தை. விக்டர் அவர்களின் 39 ஆண்டு கால மறைப்பணி வாழ்வில் 35 ஆண்டுகளை முளகுமூட்டில் செலவிட்டார். தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இம்மண்ணுக்கு தந்தார். 

இவர் அனாதைகள் இல்லம், பள்ளிக்கூடம், ஓட்டு தொழிற்சாலை, அன்னை மரியாவிற்கு பங்கு ஆலயம், மடத்தில் குழந்தை இயேசுவிற்கு ஒரு ஆலயம் ஆகியவற்றை நிறுவினார். 27-06-1897 அன்று இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தை விக்டர் அவர்கள் தென்னிந்தியாவின் அப்போஸ்தலர் என்று போற்றப்படுகிறார். அவரது விருப்பப்படி உடலானது முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டது. தொடர்ந்து பல அருட்பணியாளர்களின் அயராத உழைப்பாலும் பங்கு மக்களின் ஒத்துழைப்பாலும் முதல் பங்குத்தந்தை விட்டுச் சென்ற நற்பணிகள் தொடர்ந்தன.

பசிலிக்கா ஆலயம் :

முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் 1910-ஆம் ஆண்டு கட்டத் துவங்கி 1912-இல் நிறைவு பெற்றது. (157 ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் சிறிய ஆலயம் ஒன்று இருந்தது). 1914 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆலய பீடம் அர்ச்சிக்கப் பட்டது. 

இந்த ஆலயம் உரோமபுரி ஆர்ச் வடிவ கட்டடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டது ஆகும். 120 அடி நீளமும், 40 அடி அகலமும் 85 அடி உயரமும் கொண்ட இரண்டு அடுக்கு ஓட்டுக்கூரை ஆலயத்தை, 1982-இல் அருட்பணி J. ஜார்ஜ் அடிகள் ஓட்டுக்கூரையை மாற்றி, கான்கிரீட் கூரையாக மாற்றினார்.

தற்போது 100 அடி உயரத்தில் காணப்படும் கூண்டு வடிவ கோபுரம், ஆலயம் புதுப்பிக்கும் பணிகள், அருட்பணி. ஜார்ஜ் பொன்னையா அவர்கள் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி. ப. சகாயதாஸ் அவர்களால்  20.11.2011 அன்று துவக்கி வைக்கப்பட்டது. 

அருட்பணி. வில்லியம், இணைப் பங்குத்தந்தையர்கள் அருட்பணி. டைட்டஸ் மோகன், அருட்பணி. ஆன்றனி ஜெயக்கொடி ஆகியோரின் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட்டு, பங்கு மக்களின் நன்கொடைகள், ஒத்துழைப்புடன் அழகுற புதுப்பிக்கப்பட்டு 05.09.2014 அன்று  அர்ச்சிக்கப் பட்டது. 

ஆலய மணி : 

1891 -இல் அருட்பணி விக்டர் அவர்களால் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இனிய நாதம் கொண்ட  ஆலய மணி காணப்படுவது தனிச்சிறப்பு. 

மேலும் ஆண்டுதோறும் தேரில் பவனியாக எடுத்து வரப்படும் அன்னையின் சுரூபமானது பெல்ஜியம் நாட்டிலிருந்து அருட்பணி. விக்டர் அவர்களால் கொண்டு வரப்பட்டது ஆகும். 

ஆலய பீடத்தின் வலப்பக்கம் அமையப்பெற்ற அன்னையின் திருவுருவ எண்ணெய் கலவை ஓவியமானது, பெல்ஜியம் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. 

2008 -இல் அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் திருவுருவப்படம் ஆலய வளாகத்தில் வைத்து, புகழ்பெற்ற சிற்ப சித்திரக் கலைஞர் B. K கங்கன் அவர்களால் வரையப் பெற்று ஆலய இடப்பக்க பீடத்தில் நிறுவப்பட்டது. இது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட இறைஊழியர் தேவசகாயம் பிள்ளையின் முதல் ஓவியம் ஆகும். 

புனித அந்தோனியார் குருசடி :

1972- இல் முளகுமூடு சந்திப்பு அருகே புனித அந்தோனியார் குருசடி கட்டப்பட்டது. இக்குருசடியில் செவ்வாய்க்கிழமைகளில் புனிதரின் நவநாள் நடைபெறுகிறது.

கொடிமரம் :

80 ஆண்டுகள் பழமையான கொடிமரம் வலுவிழந்ததால் 53 அடி உயர புதிய கொடிமரம் வைக்கப்பட்டு 09-09-2012 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

அருட்பணி விக்டர் நினைவகம் :

அருணங்கால் மணவாளன் பாறையில் அருட்பணி விக்டர் அவர்களும், அவரது தம்பி அருட்பணி. யூஜின் அவர்களும் வாழ்ந்த பாறைவீடு 08-08-2011 இல் முளகுமூடு பங்கிற்கு வாங்கப்பட்டு, அருட்தந்தை. விக்டர் திருவுருவப்படம் மற்றும் குழந்தை இயேசு சுரூபமும் வைக்கப்பட்டது. வியாழன் தோறும் குழந்தை இயேசு நவநாள் நடைபெறுகிறது. பலர் இங்கு வந்து ஜெபித்து இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். 

லூர்து மாதா கெபி மற்றும் புனித குழந்தை தெரசாள் குருசடி :

லூர்து மாநகரில் அன்னை காட்சி கொடுத்ததின் 150 -வது ஆண்டு நினைவாக, ஆலயத்தின் வலது பக்கத்தில் அருட்பணி சகாயதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் 2008 -ஆம் ஆண்டில் லூர்து மாதா கெபி கட்டப்பட்டது. 

அருட்பணி. தாமஸ் மத்தியாஸ் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் 1949 -இல் புனித குழந்தை தெரசாள் குருசடி கட்டப்பட்டது. 

பௌர்ணமி ஜெபவழிபாடு :

அருள் மிகப்பெற்று பெண்களுக்குள் பேறுபேற்றவளாக, இறைவனால் வாழ்த்தப்பட்ட அன்னை மரியாள் இந்த பசிலிக்காவின் பாதுகாவலியாக உள்ளார். நிலவின் மேல் நின்று, தீமையின் அடையாளமான பாம்பின் தலையினை மிதித்து வெற்றி கண்டவள். இறை விருப்பத்தை தன்னகம் கொண்டு, அன்றாட வாழ்வை அழகு செய்து, இன்ப துன்பங்களை இணைத்தே ஏற்றுக் கொண்டவள். விண்ணக மண்ணக தாயாக உயர்த்தப்பட்டவர். 

1966-67 ஆண்டுகளில் பௌர்ணமி அன்று நடைபெற்ற அற்புத நிகழ்வின் 50-ம் ஆண்டை நினைவில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் சிறப்பு செப வழிபாடுகள் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. மாலை 06.00 மணிக்கு நற்செய்தி பெருவிழாவும், குணப்படுத்தும் செபவழிபாடும் நடைபெற்று வருகிறது. இறை மக்கள் பலரும் இதில் பங்கேற்று ஆசீர் பெற்றுச் செல்கின்றனர்.  

தாயாம் மரியாள் இந்த பசிலிக்காவின் எல்லா நிலையிலும், இறை மக்களுக்கு உதவியாக இறைவனிடம் பரிந்துரை செய்கின்றார். பலர் உடல் உள்ள நலம் பெறச் செய்துள்ளார். எனவே தான் கண்ணீரோடு ஜெபிக்கும் பலருக்கும், இறைவனின் சிறப்பு ஆசீர் பெற்றுத் தந்து, வாழ்வில் வெற்றி பெறச் செய்துள்ளார். 

மாதாவின் புதுமைகள் :

1966-67 ஆம் ஆண்டு முளகுமூடு திரு. அம்புறோஸ் கொடிய காலரா நோயினால் பாதிக்கப்பட்டு, ஆலய வளாகத்தில் உள்ள லூர்து மலையில் தமது மனைவியிடம் தங்கியிருந்து, அன்னையிடம் உருக்கமாக ஜெபிக்க, அன்னையின் காட்சி கிடைத்து நலம் பெற்றார். அப்போது பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. வர்கீஸ் அவர்கள், இந்த அற்புதத்தின் சாட்சியாக ஒரு வேப்பமரம் நீங்கள் நட வேண்டும் என்று கூற, தம்பதியர் நட்டு வைத்த வேப்பமரம் இன்றும் ஆலய வளாகத்தில் உள்ளது. இதன் இலையை மருந்தாகப் பயன்படுத்தி அனேக மக்கள் நலம் பெற்றனர். 

1967 -ஆம் ஆண்டு முளகுமூடு திருமதி. மரிய தங்கம் (க/பெ திரு. சூசை அந்தோனி) அவர்கள் தமது 17 வது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக கருதி உறவினர்கள் அவர்கள் இறுதிச் சடங்கிற்காக தயார்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அவரது தாயார் அன்னையிடம் கண்ணீருடன் அன்னையிடம் மன்றாட, அங்கு வந்த ICM சபை அருட்சகோதரிகள் சிறுமியை தங்கள் இல்லத்திற்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க அதிசயமாக உயிர் பெற்று இன்றுவரை நலமோடு வாழ்கிறார். 

20.12.2016 அன்று முளகுமூட்டைச் சேர்ந்த செல்வன். J. டாஃபின் ஜேக்கப் பயங்கரமான சாலை விபத்தில் தலையில் படுகாயம் ஏற்பட்டு,  திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் 53 நாட்கள் கோமா நிலையில் இருந்த போது, அவனுக்காக ஜெப வேளையிலும், மாதாந்திர பௌர்ணமி ஜெபவேளையிலும், முளகுமூடு இறைமக்கள் அன்னையிடம் உருக்கமாக ஜெபித்தனர். அவனது தாய் கண்ணீர் மல்க அன்னையிடம் வேண்டினார். அதிசயம் 15.01.2017 அன்று அன்னை மரியாள் வென்டிலேட்டரை மகனின் முகத்தில் இருந்து நீக்கியதாக திருக்காட்சி கண்டார். அந்நேரமே அவன் தானாக சுவாசிக்கத் தொடங்கி  சுகம் பெறத் தொடங்கினான். 11.02.2017 அன்று நடந்த பௌர்ணமி ஜெபவேளையில் இறைமக்கள் முன்பு, பூரண நலம் பெற்ற இளைஞன் சாட்சியம் பகிர்ந்தார். 

இவ்வாறாக ஏராளமான புதுமைகள் அன்னையின் வழியாக இந்த பசிலிக்காவில் நடந்து வருகின்றன.  

முதல் புதுமையானது பௌர்ணமி நாளில் நிகழ்ந்ததின் 50 -வது ஆண்டு நினைவாக, ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமி நாளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பல இடங்களில் இருந்தும் ஏராளமான இறை மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்கின்றனர். 

பசிலிக்காவாக உயர்வு:

14.01.2016 அன்று திருத்தந்தையின் சிறப்புத்தூதர் டெல்லியிலிருந்து முளகுமூடு வந்து, தூய மரியன்னை ஆலயத்தை சந்தித்த போது, இங்கு ஆழமாய் வேரூன்றியுள்ள இறை நம்பிக்கையை பாராட்டினார். தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி. டொமினிக் M. கடாட்சதாஸ் அவர்களின் பசிலிக்கா தொடர்பான வேண்டுகோளை, குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் ச. ச அவர்களால் ஏற்கப்பட்டது. மறைமாவட்ட ஆயர் அதனை சிறப்பு வேண்டுகோளாக மதுரை பேராயர், தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர், இந்திய ஆயர் பேரவைத்தலைவர் ஆகியோருக்கு அனுப்பி, அதற்கான தடையில்லா சான்றிதழை (Nihil Obstact) கோரினார்கள். அதன்படி மேற்கூறியவர்களின் சான்று திருத்தந்தையின் தூதரிடம் வழங்கப்பட்டு, உரோம் நகரில் திருத்தந்தையின் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டது. 

இறுதியாக வத்திக்கானிலுள்ள Apostolic Nuncio of congregation for Divine worship and Descipline of the Sacrements அவர்கள் 2020 ஜூன் 9 அன்று Our Lady of Nativity முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை மைனர் பசிலிக்காவாக (Minor Basilica) உயர்த்தி ஆணை வழங்கினார். வரலாற்று சிறப்பு மிக்க இவ்வாணையால் இவ்வாலயமானது தமிழகத்தின் 7 -வது பசிலிக்காவாக (தமிழகம் புதுவையின் 8 -வது பசிலிக்காவாக) உயர்த்தப் பட்டுள்ளது. 

முறைப்படியான பசிலிக்கா சிறப்பு அறிவிப்பு மற்றும் அர்ப்பணிப்பு பெருவிழாவானது வெகுவிரைவில், கோவிட் 19 பொதுமுடக்க காலத்திற்குப் பின்னர் முளகுமூட்டில் வைத்து வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

தனித்தன்மைகள்:

அருட்பணி. விக்டர் அவர்கள் முளகுமூட்டில் விலைக்கு வாங்கிய நாற்பது ஏக்கர் நிலத்தில் இன்று பல்வேறு நிறுவனங்கள் சிறப்புற செயல்பட்டு, அருட்தந்தையின் கனவை நனவாக்கி வருகின்றன. 

அவற்றில் முக்கியமானவை நாஞ்சில் பால் பதனிடும் நிலையம், 

போப் இரண்டாம் ஜான்பால் கல்வியியல் கல்லூரி,

புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, 

புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 

ICM அருட்சகோதரிகளின் இல்ல தாய்மடம், 

குழந்தை இயேசு தொடக்க உயர்நிலைப் பள்ளி, 

St Mary's International school (ICSE) 

IJ Arts & Science college 

குழந்தை இயேசு தையல் பயிற்சி நிலையம், என பல்வேறு நிறுவனங்களும் சிறப்புற செயல்பட்டு வருகின்றன.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்கு அருட்பணிப் பேரவை

2. அன்பிய ஒருங்கிணையம்

3. திருவழிபாட்டுக்குழு

4. தொன்போஸ்கோ மறைக்கல்வி மன்றம் 

5. சிறார் இயக்கம் 

6. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் 

7. புனித மரியன்னை இளைஞர் இயக்கம்

8. அனல் இளம்பெண்கள் இயக்கம் 

9. கத்தோலிக்க சேவா சங்கம் 

10. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் 

11. மரியாயின் சேனை 

12. கோல்பிங் இயக்கம்

13. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

14. மரியன்னை முன்னேற்ற சங்கம் 

15. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் 

16. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் 

17. தானம் பணிக்குழு

18. கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம்

19. கத்தோலிக்க சங்கம். 

முளகுமூடு ஆலய பங்குத்தந்தையர்கள்:

1. Fr. விக்டர் OCD (Belgium) - 1860 முதல் பங்குத்தந்தை 

2. Fr. யூஜின் (Belgium) (Fr விக்டரின் தம்பி இணைப் பங்குத்தந்தையாக செயல்பட்டார்) 

3. Fr. டொனிஷியன் (Fr விக்டரின் மறைவுக்குப்பின் பொறுப்பேற்றார்)

4. Fr. டென்னிஸ் (1905)

5. Fr. பவுலின் (1908)

6. Fr. லூயிஸ் 

7. Fr. கொனேரியஸ் 

8. Fr. வின்சென்ட் 

9. Fr. அம்புறோஸ் (1912)

10. Fr. A. இக்னாசியஸ் மரியா 

11. Fr. S. கோர்ஸ்குட் (1916) 

12. Fr. ஸ்தனிஸ்லாஸ் (1917) 

13. Fr. வல்லேரியான் (1924-1930) 

14. Fr. ஹென்றி பயஸ் (1931-1932)

15. Fr. மிக்கேல் (1933)

16. Fr. லூக்காஸ் (1934-1935)

17. Fr. A. அந்தோணி முத்து (1936-1938)

18. Fr. பால் ஸ்டீபன் (1939) 

19. Fr. Y. B பீட்டர்ஸ் (1940)

20. Fr. மார் இவானிஸ் (1943)

21. Fr. P. B ரெபேரா (1941-1947)

22. Fr. தாமஸ் மத்தியாஸ் (1948-1960)

23. Fr. வர்கீஸ் (1961-1969)

24. Fr. அந்தோணி முத்து (1970-1974)

25. Fr. J. ஜார்ஜ் (1975-1984)

26. Fr. மரியதாசன் (1985-1986)

27. Fr. கபிரியேல் (1987-1989)

28. Fr. R. லாரன்ஸ் (1990-1994)

29. Fr. ஜோசப் ராஜ் (1995-1996)

30. Fr. சேவியர் புரூஸ் (1997-1999) 

31. Fr. அமிர்தராஜ் (2000-2001)

32. Fr. யேசுரெத்தினம் (2002-2006) (வட்டார முதல்வர்) 

33. Fr. பெர்க்மான்ஸ் (1999-2005)

34. Fr. சகாயதாஸ் (2006-2011)

35. Fr. மரிய வில்லியம் (2012-2015)

36. Fr. டோமினிக் கடாட்சதாஸ் (2015 முதல் தற்போது..) 

பங்கில் பணியாற்றிய உதவி பங்குத்தந்தையர்கள்:

1. Fr. யூஜின் (1860)

2. Fr. செபாஸ்டியன் (1924)

3. Fr. பயஸ் மோரிஸ் (1924)

4. Fr. டோமினிக் (1925)

5. Fr. தொபியாஸ் (1926)

6. Fr. பால் (1927)

7. Fr. செர்வாசியூஸ் (1928)

8. Fr. அகஸ்டின் (1928)

9. Fr. ஜான் (1929)

10. Fr. தனிஸ்லாஸ் மரியா (1930-31)

11. Fr. N. J. ஜார்ஜ் (1937-38)

12. Fr. C. M. ஹில்லாரி (1940-1943)

13. Fr. A. J. ஜோசப் (1944)

14. Fr. V. J. ஸ்டீபன் (1944)

15. Fr. M. டைனீசியஸ் (1944-47)

16. Fr. பர்ணபாஸ் நேவிஸ் (1947-48)

17. Fr. ஞானப்பிரகாசம் (1948-51)

18. Fr. ஜேம்ஸ் தொம்பர் (பெல்ஜியம்) (1951-52)

19. Fr. சூசை மரியான் 

20. Fr. S. ஜோசப் (1956-1959)

21. Fr. J. ஜார்ஜ் (1959-1961)

22. Fr. தொபியாஸ் (1961-1963)

23. Fr. வெனான்சியூஸ் (1961-62)

24. Fr. C. M. வென்சஸ்லாஸ் (1962-63)

25. Fr. G. கிறிஸ்துதாஸ் (1963-1966)

26. Fr. ஜேசுதாசன் தாமஸ் (1963-1967)

27. Fr. A. செல்வராஜ் (1966-68)

28. Fr. பெஞ்சமின் (1967-69)

29. Fr. ஹெர்மனஜில்ட் (1969-70)

30. Fr. லூக்காஸ் (1970-71)

31. Fr. எப்பபிரஸ் (1971-72)

32. Fr. ஹில்லரி (1971-72)

33. Fr. மரிய ஆரோக்கியம் (1970-71)

34. Fr. செபஸ்டின் பெர்னாண்டோ (1972-73)

35. Fr. எட்வின் மரிய ஜான் (1973-74)

36. Fr. P. மார்க் (1974-75)

37. Fr. A. யூஜின் (1976-77)

38. Fr. ஹென்றி (1977-78)

39. Fr. ஜெரோமியாஸ் (1980-81)

40. Fr. R. ஆன்றனி (1978-79)

41. Fr. ஹொனேரியஸ் (1981-83)

42. Fr. சேவியர் புரூஸ் (1983-84)

43. Fr. லடிஸ்லாஸ் பெஞ்சமின் (1984-85)

44. Fr. அலோசியஸ் M. பெஞ்சமின் (1986-87)

45. Fr. மரிய மார்ட்டின் (1988-89)

46. Fr. பத்ரோஸ் (1987-88)

47. Fr. உபால்ட் (1989-1990)

48. Fr. K. ஜார்ஜ் (1990-91)

49. Fr. கஸ்பார் ராஜ் (1991-92)

50. Fr. ஆல்பர்ட் ஜார்ஜ் (1992-93)

51. Fr. கிறிஸ்து இராஜமணி (1993-94)

52. Fr. தேவதாஸ் (1994-95)

53. Fr. சைலட் மணி (1995-96)

54. Fr. புஷ்பராஜ் (1998)

55. Fr. ஜான் போஸ்கோ (1998)

56. Fr. A. செல்வராஜ் (1968)

57. Fr. ஆன்றனி ஜெயா (2000)

58. Fr. J. ராபின்சன் (2001-03)

59. Fr. ஜான் பிரிட்டோ (2003)

60. Fr. மார்ட்டின் (2010-11)

61. Fr. ஞான ஆரோக்கிய ஆன்றனி ஜோஸ் (2011)

62. Fr. பபியான்ஸ் (2012)

63. Fr. டைட்டஸ் மோகன் (2013)

64. Fr. ஆன்றனி ஜெயக்கொடி (2014)

65. Fr. பிளாரன்ஸ் (2015-16)

66. Fr. ஜெயக்குமார் (2016-17)

67. Fr. விக்டர் ஜோசப் ஆனந்தராஜ் (2017-18)

68. Fr. ஆரோக்கிய தாஸ் (2018-19)

69. Fr. ஸ்டீபன் 

70. Fr. தாமஸ். 

இவ்வாறு சிறந்த வரலாற்றைக் கொண்ட, புதுமைகள் நிறைந்த, சமூகத்தில் பல்வேறு வளர்சி மாற்றங்களுக்கும் வித்திட்ட முளகுமூடு பசிலிக்காவானது, தூய மரியன்னையின் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக கொண்டாடுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இறை மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தூய மரியன்னையின் வழியாக, இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். சிறப்பு மிக்க இவ்வாலயமானது தற்போது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது குமரி மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வாருங்கள் தூய மரியன்னை திருத்தலப் பேராலயத்திற்கு.. பெற்றுச் செல்லுங்கள் அன்னையின் வழியாக இறைவனின் அருள் வரங்களை... 

சிறப்பாக இன்று (13.09.2020) முளகுமூடு பசிலிக்காவின் பெருவிழா.

இந்த நாளில் ஏற்கனவே கடந்த ஆண்டு பதிவு செய்த இவ்வாலயத்தை மேலும், கூடுதல் தகவல்களுடன் பதிவு செய்ய அருள் புரிந்த இறைவனுக்கும், பேராலய பங்குத்தந்தை, நிர்வாகிகள், பங்கு மக்கள், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் திரட்டி தந்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... 

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. டோமினிக் M. கடாட்சதாஸ் அவர்கள். 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரித்து உதவியவர் : மண்ணின் மைந்தர் அருட்சகோ. பெர்பின் பியோ அவர்கள்.