316 புனித அந்தோணியார் ஆலயம், நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம், அலவந்தான்குளம்


புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம்.

இடம் : அலவந்தான்குளம்

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை

நிலை : பங்குத்தளம்
கிளை : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி இம்மானுவேல் பிரான்சிஸ் ராஜ்

குடும்பங்கள் : 1500
அன்பியங்கள் : 13

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

செவ்வாய், வெள்ளி திருப்பலி : மாலை 07.00 மணிக்கு.

திங்கள், புதன், வியாழன், சனி திருப்பலி : காலை 05.30 மணிக்கு.

திருவிழா : மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து 13 நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்தந்தையர்கள் : 11
அருட்சகோதரிகள் : 33
அருட்சகோதரர்கள் : 5

வழித்தடம் :

திருநெல்வேலி - அலவந்தான்குளம் மற்றும் திருநெல்வேலி - தெற்கு செலியநல்லூர்.

பேருந்துகள் : 33A, 33 E, N33, 23B, 5L, 10L, 3G.

வரலாறு :

ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று சகோதரர்கள் பிழைப்புத் தேடி தங்களின் ஆடு மாடுகளுடன் 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலவை மண்ணில் தஞ்சம் புகுந்தனர். தற்போது ஆலயம் உள்ள இந்த இடத்தில் அவர்கள் ஓலையால் வேயப்பட்ட சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டி, அதில் தாங்கள் கொண்டுவந்த புனித பதுவை அந்தோணியார் சுரூபத்தை ஒரு மண்பானைக்குள் வைத்து வழிபட்டனர்.

புனித அந்தோணியார் வழியாகப் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களுக்கு நன்றியாக, கி.பி. 1650-ல்; சுண்ணாம்பு மற்றும் செங்கல்லைக் கொண்டு ஒரு சிறிய ஆலயத்தை கட்டினர். (தற்போதைய ஆலயத்தின் பீடப்பகுதி). பின்னாளில் அந்த சிற்றாலயம் வெவ்வேறு காலக்கட்டங்களில் மக்களால் விரிவு படுத்தப்பட்டது.

அவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட ஆலயத்தைப்பற்றி 1951-ல் வெளியான, தமிழக இயேசு சபை பத்திரிக்கை காரிதாஸ் பின்வருமாறு கூறுகிறது.
‘அலவந்தான்குளம் 17-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பழமையான கிறிஸ்தவ குடியிருப்பு ஆகும். இங்குள்ள ஆலயம் பண்டயக்கால கோட்டை போன்று என்றும் காலத்தால் அழியாது, பலநூறு ஆண்டுகளை கடந்து இன்றும் புதுப்பொலிவுடன் கம்பீரமாக நிற்கின்றது. இங்குப் பெருகிய மக்கள்தொகைக்கு ஏற்ப ஆரம்பத்தில் கட்டப்பட்ட ஆலயமானது பல்வேறு காலக்கட்டங்களில் பழமை மாறாமல் விரிவுபடுத்தப்பட்டது. நிலபிரபுத்துவ காலங்களில் கொள்ளை கும்பலிடமிருந்து மக்களை பாதுகாக்கும் அரணாகவும் இந்த ஆலயம் விளங்கியுள்ளது’.

மதுரை உயர் மறைமாவட்டம் 1943 ம் ஆண்டு செப்டம்பர் 01 அன்று அலவந்தான்குளத்தை தனிப்பங்காக அறிவித்தது.

அருட்தந்தை தாமஸ் வேதநாயகம் அல்மேய்டா சே.ச. இங்கு முதல் பங்குகுருவாக பொறுப்பேற்றார்.

புதுமைநகர், புளியம்பட்டி உட்பட 9 கிராமங்கள் அலவந்தான்குளம் பங்கின் கிளை கிராமங்களாகச் செயல்பட்டன.

ஏறக்குறைய 1967-வரை திருப்பலி மற்றும் ஏனைய திருவழிபாடுகள் அனைத்தும் இந்த ஆலயத்தில்தான் நடைபெற்றன. புனித அந்தோணியாரின் பரிந்துரையால் அலவை பங்குமக்கள் தொடர்ந்து பல்வேறு அருள் வளங்களை நிறைவாகப் பெற்று வளர்ந்தனர்.

அதிகரித்த மக்கட்தொகைக்கு ஏற்ப ஆலயத்தில் போதுமான இடவசதி இல்லாததால், 04-03-1967 அன்று அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை R.S. அமல்ராஜ், சே.ச. அவர்கள் இந்த ஆலயத்தின் முன்பகுதியில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். தனது எளிமையாலும், ஆன்மீகத்தாலும் அலவைப் பங்கில் நீங்காத முத்திரை பதித்தவர் அருட்தந்தை ஜோசப் பண்ணூர், சே.ச. அவர்கள். அவர் புதிய ஆலயத்தை பங்குமக்களின் தாராள உதவியுடன் சுமார் 17 ஆண்டுகளில் கட்டிமுடித்தார்.

17-05-1984 அன்று புதிய ஆலயம் புனிதப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.

1984-ல் இருந்து பல ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்த நற்கருணை ஆலயமானது, அலவந்தான்குளம் பங்கு உருவான 75-வது ஆண்டு (1943- 2018) பவளவிழா நினைவாக 2018-ஆம் ஆண்டு அருட்தந்தை இம்மானுவேல் பிரான்சிஸ் மற்றும் அலவைநகர் பங்குமக்களால் நற்கருணை ஆலயமாக புதுபிக்கப்பட்டது.

இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்த பெருவிழா நாளாகிய 23-06-2019 இன்று மாலையில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக பாளை மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, அலவை மண்ணின் முதல் குரு அருட்தந்தை மரியநாதன், சே.ச. அவர்களால் திறக்கப்படவுள்ளது.. அலவை பங்குமக்களின் விசுவாச வரலாற்றின் ஆணிவேரும், அடித்தளமுமான இந்த ஆலயத்திற்கு அனைவரும் வாரீர்! நற்கருணை ஆண்டவரின் அருள்பெறுவீர்!!

1943 ல் தனிப்பங்காக ஆனது முதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. டல்மேடா சே. ச (1943-1951)
2. Fr C. யுவானா சே. ச (1951-1958)
3. Fr D. பிரான்சிஸ் சேவியர் சே. ச (1958-1959)
4. Fr V. D அருளானந்தம் (1959-1961)
5. Fr R. S அமல்ராஜ் சே. ச(1961-1973)
6. Fr J. ஜோசப் பன்னூர் சே. ச (1973-1984)
7. Fr G. J அமலன் (1984-1986)
8. Fr S. I அருளப்பன் (1986-1988)
9. Fr A. அந்தோணி குரூஸ் (1988-1991)
10. Fr J. ஜோசப் பன்னூர் சே. ச (1991-2010)
11. Fr I. அருள் சே. ச (2010-2012)
12. Fr A. அம்புரோஸ் சே. ச (2012-2013)
13. Fr T. பெர்க்மான்ஸ் அந்தோணி (2013-2014)
14. Fr எரிக் ஜோ (2014-2016)
15. Fr இம்மானுவேல் பிரான்சிஸ் ராஜ் (2016 முதல்....)