புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம்
இடம் : மார்த்தால்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : தேவசகாயம் மவுண்ட்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித மலை சவேரியார் ஆலயம், காரியான்கோணம்
2. புனித அந்தோணியார் ஆலயம், திட்டுவிளை
3. புனித ஜெபமாலை அன்னை ஆலயம், திடல்.
பங்குத்தந்தை : அருட்பணி. K. மரியதாஸ்
இணைப் பங்குத்தந்தை : அருட்பணி. ஆரோக்கிய ஜெனிஷ்
குடும்பங்கள் : 385
அன்பியங்கள் : 11
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு காலை : 07.00 மணிக்கு செபமாலை, காலை 07.30 மணிக்கு திருப்பலி.
திங்கள், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி :காலை 06.30 மணிக்கு.
புதன் மாலை 05.30 மணிக்கு செபமாலை, சகாயமாதா நவநாள், திருப்பலி, நோயுற்றோருக்கான செபம்.
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.30 மணிக்கு செபமாலை, புனிதரின் நவநாள், திருப்பலி, நோயுற்றோருக்கான செபம், எண்ணெய் பூசுதல், நற்கருணை ஆசீர்.
மாதத்தின் மூன்றாவது சனி மாலை 06.30 மணிக்கு கெபியில் செபமாலை, திருப்பலி, நோயுற்றோருக்கான செபம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 06.00 மணிக்கு கெபியில் செபமாலை, புகழ்மாலை.
திருவிழா : அக்டோபர் 04 -ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள். ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழாவின் போது சிறப்பு தேர்பவனி.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. பால் லியோன்
2. அருட்பணி. அந்தோணி தாஸ்
3. அருட்பணி. பென்சிகர்
4. அருட்பணி. ஆன்றனி அருள் ஜெரால்டு
5. அருட்பணி. பவுலிஸ்
6. அருட்பணி. ஜான் பால்
7. அருட்சகோதரி. செலின் CTC
வழித்தடம் : 4 route பேருந்துகள்.
Address and location Map : St.Francis Assisi Church, Marthal, Thittuvilai, Tamil Nadu 629852
https://maps.google.com/?cid=4035931774100792088
வரலாறு :
சுற்றிலும் மலைகள், காணும் இடமெல்லாம் அழகிய வயல்வெளிகள், சலசலத்து ஓடும் வாய்க்கால்கள், பசும் மரச் சோலைகள் என இயற்கையின் அத்தனை கொடைகளையும் கொண்ட அழகிய ஊர் தான் மார்த்தால். இந்த அழகிய ஊரில் ஓங்கி நிற்கும் தூய பிரான்சிஸ் அசிசியார் ஆலய வரலாற்றைக் காண்போம்.
அருட்பணி. ஜான்மேரி அவர்களின் முயற்சியால் மார்த்தால் பகுதியில் 01.04.1929 ஆம் ஆண்டு ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டு, புனித பிரான்சிஸ் அசிசியாரை பாதுகாவலராகக் கொண்டு, நாகர்கோவில் குருசடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.
கோட்டார் மறை மாவட்டத்தில் புனித பிரான்சிஸ் அசிசியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயமும், ஒரே ஆலயம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
குருசடி பங்கிலிருந்து அருட்பணியாளர்கள் இங்கு வந்து இப்பகுதி மக்களை ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் 25.07.1936 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தை அருட்பணி. E. பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள்.
தனிப் பங்கான தொடக்க காலத்தில் எட்டாமடை, தடிக்காரன்கோணம், சுருளோடு, கீரிப்பாறை, செக்கடி, பெருந்தலைக்காடு, மேலத்திடல், தெள்ளாந்தி, சீதப்பால் மற்றும் இறச்சகுளம் ஆகியன மார்த்தாலின் கிளைப் பங்குகளாக விளங்கின.
1973 ல் எட்டாமடை மற்றும் தடிக்காரன்கோணம் ஆகியன தனிப் பங்குகளாயின.
பங்கு ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு 23.08.1988 அன்று குருகுல முதன்மைப் பணியாளர் அருட்பணி. சூசை மரியான் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி. செல்லையன் (1990- 1993) பணிக்காலத்தில் அன்பியங்கள் துவக்கப் பட்டன. மேலும் இவரது பணிக்காலத்தில் தூய அசிசி ஆங்கிலப்பள்ளி, அருட்சகோதரிகள் இல்லம் ஆகியன நிறுவப்பட்டு பங்கின் வளர்ச்சிக்கு வழி காட்டினார். ஆலயத்தின் முன்பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு
09.10.1999 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அர்ச்சிக்கப் பட்டது.
2002 ஆம் ஆண்டு சீதப்பால் தனிப் பங்கானது.
2006 ஆம் ஆண்டு செக்கடி தனிப் பங்கானது.
அருட்பணி. பெர்பெச்சுவல் அவர்களால் 2005-2006 காலகட்டத்தில் திருமண மண்டபம் கட்டும் பணி ஆரம்பமானது.
மார்த்தால் பங்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடையால் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டு 06.05.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
புனித லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 15.08.2019 அன்று பங்குத்தந்தை அருட்பணி. K. மரியதாஸ், இணைப் பங்குத்தந்தை அருட்பணி. A. ஆரோக்கிய ஜெனிஷ் ஆகியோரால் அர்ச்சிக்கப் பட்டது.
பங்கின் பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. ஜான்மேரி (1929-1936)
2. அருட்பணி. பிரான்சிஸ் (1936-1940)
3. அருட்பணி. லூக்காஸ் (1940-1943)
4. அருட்பணி. பால்ஸ்டீபன் (1943-1949)
5. அருட்பணி. ரபேல் (1944-1951)
6. அருட்பணி. ஏசுதாசன் (1951-1952)
7. அருட்பணி. அகஸ்டின் பெர்னாண்டோ (1952-1957)
8. அருட்பணி. ஜார்ஜ் வி. எம் (1957-1961)
9. அருட்பணி. சூசைய்யா (1961-1967)
10. அருட்பணி. கிறிஸ்துதாஸ் (1967-1972)
11. அருட்பணி. மார்ட்டின் அலங்காரம் (1972-1978)
12. அருட்பணி. அருளப்பன்.எஸ் (1978-1982)
13. அருட்பணி. ஜோசப். எஸ் (1982-1990)
14. அருட்பணி. செல்லையன். பி. கே (1990-1993)
15. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (1993-1996)
16. அருட்பணி. மரியமிக்கேல் (1996-2001)
17. அருட்பணி. லியோ அலெக்ஸ் (2001-2003)
18. அருட்பணி. பெர்பெச்சுவல் (2003-2006)
19. அருட்பணி. பொன்னோராஜ் (2006-2010)
20. அருட்பணி. ஆன்றனி கோமஸ் (2010-2014)
21. அருட்பணி. புஷ்பராஜ் (2014-2019)
22. அருட்பணி. K. மரியதாஸ் (2019 முதல் தற்போது வரை..)
இணைப் பங்குத்தந்தையர்கள்: இன்று வரை
அருட்பணி. குருசு கார்மல்
அருட்பணி. லிகொரியஸ்
அருட்பணி. ஆரோக்கிய ஜெனிஷ்
வரலாறு : ஆலய மலரிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டது.