458 பரிசுத்த பரலோக அன்னை ஆலயம், பிரகாசபுரம்


பரிசுத்த பரலோக அன்னை ஆலயம்

இடம் : பிரகாசபுரம், நாசரேத்.

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : சாத்தான்குளம்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாதாவானம்
2. புனித சூசையப்பர் ஆலயம், கந்தசாமிபுரம்
3. இயேசுவின் திருஇருதய ஆலயம், பிள்ளையன்மனை
4. புனித லூர்து அன்னை ஆலயம், உடையார்குளம்
5. புனித லூர்து அன்னை ஆலயம், தோப்பூர்
6. புனித அந்தோணியார் ஆலயம், தேமாங்குளம்
7. புனித அந்தோணியார் ஆலயம், குறிப்பன்குளம்

பங்குத்தந்தை : அருட்பணி. ஆன்றனி இருதய தாமஸ்.

குடும்பங்கள் : 300
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

நாள்தோறும் காலை 06.00 மணி அல்லது மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் 06 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு 14, 15 தேதிகளில் திருவிழா.

பங்கின் கெபிகள் :
1. பரலோக மாதா அற்புத கெபி - திருவிழா ஆகஸ்ட் 16 ம் தேதி.
2. புனித மிக்கேல் அதிதூதர் கெபி - திருவிழா செப்டம்பர் 20 முதல் 29 வரை.
3. புனித அந்தோனியார் கெபி
4. புனித ஆரோக்கிய அன்னை கெபி - செப்டம்பர் 8 ம் தேதி.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. மரிய ஜெயராஜ் சே. ச
2. அருட்பணி. T. விக்டர்
3. அருட்பணி. மார்ட்டின் மனுவேல்
4. அருட்பணி. ம. பீட்டர்
5. அருட்பணி. அ. ஒயிட்ராஜா
6. அருட்பணி. ஞா. அலெக்ஸ்

7. அருட்சகோதரி. விமலா மேரி
8. அருட்சகோதரி. லூசியா மெலானி
9. அருட்சகோதரி. லூசியா அந்தோனி டெய்சி
10. அருட்சகோதரி. புனிதா
11. அருட்சகோதரி. ஜோஸ்பின்

Church Facebook address : https://www.facebook.com/Our-Lady-of-Assumption-Church-11…/⁣
Follow us on Instagram: https://instagram.com/st.marys_church_official…

வழித்தடம் : திருநெல்வேலி to நாசரேத், தூத்துக்குடி to நாசரேத் இறங்குமிடம்: பிரகாசபுரம்

வரலாறு :

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் பிரகாசபுரத்தில் உள்ள பரிசுத்த பரலோக அன்னை ஆலயமானது நூற்றாண்டு பழைமையானது இதன் வரலாற்றைக் காண்போம்.

புனித தோமையார் முதல் நூற்றாண்டில் இந்தியாவற்கு வந்து கிறிஸ்தவ மறையை போதித்தார். தொடர்ந்து போதிய வழிகாட்டுதல் இல்லாமையால் வளர்ச்சி தடை பட்டது. பின்னர் கி.பி 15 ,16 ஆம் நூற்றாண்டில் தான் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. குறிப்பாக தென் மாநிலங்களான தமிழகத்திலும், கேரளாவிலும் கிறிஸ்தவம் வேகமாகப் பரவியது. அதில் முத்துக்குளித்துறை மாநகர் என போற்றப்படும் தூத்துக்குடி மறை மாவட்டத்தில் வளர்ச்சி அதிகமாக இருந்தது.

தூத்துக்குடி மறை மாவட்ட மூதாதையர்களின் இறை நம்பிக்கையை கண்ணுற்ற இயேசு சபை குருக்கள், மறை மாவட்டத்தின் உட்பகுதியிலும் திருச்சபையை காலூன்றச் செய்தனர். இருப்பினும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிற சபையின் வளர்ச்சிக்கு இணையாக கத்தோலிக்கம் வளரவில்லை.

இவ்வேளையில் தான் இறைவனின் தாய் பரலோக அன்னையைப் பாதுகாவலியாக கொண்டு, ஆலயங்கள் எழுப்பப்பட்டு மக்களுக்கு கத்தோலிக்க மறை உண்மைகள் உணர்த்தப்பட்டது. இதற்கு எடுத்துக் காட்டாக வடக்கில் காமநாயக்கன்பட்டியும், தெற்கில் வடக்கன்குளத்தையும் கூறலாம். இவ்விரு பழைமையான ஆலயங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் இடம் தான் பிரகாசபுரம்.

கி.பி 1879 ஆம் ஆண்டில் பிரகாசபுரம் பகுதியில் 14 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்து வந்தன. பிரகாசபுரம் ஊரானது பிரகாசபுரம் என்ற பெயரிலும், நாசரேத் என்ற ஊர் புதூர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதனால் தான் வரலாற்று ஏடுகளில் புதூர்-பிரகாசபும் என்ற பெயர் உள்ளது.

15.08.1880 ல் பிரகாசபுரத்தில் பரலோக மாதா சிற்றாலயம் கட்டப்பட்டு, அருட்தந்தை டேனிஷ் குஷான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சாத்தான்குளம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.

முதன் முதலாக 15-08-1895 ல் பரலோக தாயின் சப்பர திருநாள் நடத்தப்பட்டது. அப்பொழுது 3 சப்பரங்கள் இருந்தன. அதை இறைமக்கள் தோளில் சுமந்து செல்லுவார்கள். பின்பு நாட்கள் போகப் போக சப்பரங்களுக்கு மாற்றாக தேர் செய்யப்பட்டது. அதன் பின்பு வந்த திருநாட்களில் இறைமக்கள் வடம்பிடித்து தேரை இழுத்து அன்னையின் விழாவை கொண்டாடத் தொடங்கினர்.

1887 ல் சாத்தான்குளம் பங்கிலிருந்து புதூர்-பிரகாசபுரம் தனியாக பிரிக்கப்பட்டு அருட்தந்தை. நிக்கோலாஸ் அடிகளாரிடம் ஒப்படைக்கப் பட்டது.

நாளடைவில் இப்பங்கு அழியலாயிற்று. இருந்த போதும் முன்னோர்களிடம் இருந்த இறை விசுவாசம் குறையவேயில்லை. எனவே தான் திருச்சி மறை மாவட்ட ஆயர் மேதகு பார்த்தே ஆண்டகை, தாய்ப்பங்காக விளங்கிய சாத்தான்குளத்திற்கு வருகை புரிந்த போது, 1909 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் பிரகாசபுரம் தனிப் பங்காக உத்தரவிட்டார்.

கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயர் (நாசரேத்தின் தந்தை) தனது ஜெப அறையில் வைத்து வணங்கிய, இயேசு கிறிஸ்துவின் திருச் சிலுவையை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்திற்கு 1907 இல் வழங்கினார்.

1909 ல் பிரகாசபுரம் தனிப் பங்காக உருவானது. சாத்தான்குளம் மற்றும் புன்னக்காயல் பங்குகளில் இருந்து பிரிக்கப்பட்ட கிளைப்பங்குகள் பிரகாசபுரம் பங்கோடு இணைக்கப் பட்டது. 1913 ல் அருட்பணி.T. மிக்கேல் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய ஆலய அஸ்திவாரம் பணிகள் முடிந்த பின்பு ஆலய கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதனால் திருப்பலி பழைய சிற்றாலயத்திலேயே நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு புதிய ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு 21-11-1967ல் மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

பழைய சிற்றாலய நூற்றாண்டு (1880- 1980) நினைவாக பழைய சிற்றாலய இடத்தில் 11-08-1980ல் பரலோக மாதா கெபி கட்டப்பட்டது.

அருட்பணி. ஜாக்சன் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்த காலகட்டத்தில் புதிய ஆலய பலிபீடமானது புதுப்பிக்கப்பட்டு ஆலய தரைகள் மாற்றப்பட்டன.

பரலோக மாதா நூற்றாண்டு கெபி கட்டப்பட்டதன் 25 -ம் ஆண்டில் மீண்டும் அந்த கெபி 14-08-2007ல் அருட்பணி. A.S. ராஜா அவர்களால் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

St. Mary's Mahal :

பங்கிற்கு என சொந்தமான ஒரு திருமண மண்டபம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பங்குமக்களின் நீண்டநாள் ஆசையாக இருந்தது. அதன் விளைவாக 2003ல் அப்போது பங்குத்தந்தையாக இருந்த Fr. Arul Jackson ஆல் அஸ்திவாரத்துடன் ஆரம்பமானது. Most.Rev. Bishop.Yuvon Ambrose தனது திருக்கரங்களால் அடிக்கல் நாட்டினார். தூண்கள் எழுப்பப்பட்டு கான்க்ரீட் போடும் பணி வரை முடிவடைந்தது. Fr. A.S. Raja இருந்த காலகட்டத்தில் முதல் மாடி மேற்கூரை வரை பணிகள் நிறைவுபெற்றது. அடுத்ததாக வந்த Fr. Antony Duglas தனது முயற்சியால் இந்த மண்டபத்தை முழுவதுமாக மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கட்டி நிறைவு செய்தார். அதன் பிறகு நம் தாயின் பெருநாளான 15-08-2013ல் Most.Rev.Bishop.Yuvon Ambrose ஆசீர்வதிக்க Aachi Masala நிறுவனர் Mr.A.D. Padmasing Isac திறந்து வைத்தார்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 முதல் 14 ம் தேதி வரை நடைபெறுகின்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவது சிறப்பாகும். ஜாதி மத பாகுபாடின்றி இந்து சகோதரர்கள், முஸ்லீம் சகோதரர்கள், கிறிஸ்தவ பிரிவினை சகோதரர்கள் அனைவரும் அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்வது இதன் சிறப்பாகும்.

சமபந்தி அசனம் :
பிரகாசபுரம் பங்கின் சார்பாக வருடத்திற்க்கு மூன்று முறை சமபந்தி விருந்து நடைபெறுகிறது.
1. மே முதல் சனி
2. செப்டம்பர் 29
3. ஆகஸ்ட் 16.

பங்கின் நிறுவனங்கள் :
St. Mary Midddle School, Pragasapuram
St. Mary's Mahal, 
Pragasapuram Servite Convent.
St. Joseph Primary School, Kandasamipuram
R.C. Primary School, Thoppur
R.C. Primary School, Udayarkulam.

பங்கின் பங்குத்தந்தையர்கள் :
1. Fr. E. மாஸ் (1909-1911)
2. Fr. T. மிக்கேல் (1911-1919)
3. Fr. சிக்காது (1919-1921)
4. Fr. A. அடைக்கலம் (1921-1931)
5. Fr. M. S. மரியான் (1931-1940)
6. Fr. சேவியர் மெல் (1940-1945)
7. Fr. M. பெர்னாண்டோ (1945-1947)
8. Fr. J. V. பூபாலராயர் (1947-1949)
9. Fr. லூர்துநாதர் (1949-1954)
10. Fr. F. X. சிங்கராயர் (1954-1956)
11. Fr. ரோசாரியோ கொரேரா (1956-1959)
12. Fr. கபிரியேல் (1959-1961)
13. Fr. பங்கிராஸ் (1961-1965)
14. Fr. D. J. C. அமிர்தம் (1965-1966)
15. Fr. G. பிரான்சிஸ் (1966-1972)
16. Fr. குரூஸ் மரியான் (1972-1978)
17. Fr. M. பங்கிராஸ் ராஜா (1978-1982)
18. Fr. ஜோசப் ரத்னராஜ் (1983-1984)
19. Fr. லடிஸ்லாஸ் (1984-1985)
20. Fr. ஜோசப் அமல்ராஜ் (1985-1990)
21. Fr. எட்வர்ட். J (1990-1995)
22. Fr. ஜெபநாதன். M (1995-1997)
23. Fr. M. தாமஸ் (1997-2002)
24. Fr. ஜாக்சன் M. அருள் (2002-2007)
25. Fr. A. S. ராஜா (2007-20012)
26. Fr. P. K. அந்தோணி டக்ளஸ் (2012-2016)
27. Fr. பிரபாகர் (2016-2017)
28. Fr. ஆன்றனி இருதய தாமஸ் (2017 முதல் தற்போது வரை)

வரலாறு : ஆலய வரலாற்று மலரிலிருந்து எடுக்கப் பட்டது.