குடந்தை மறைமாவட்டம்

குடந்தை மறைமாவட்டம் (இலத்தீன்: Kumbakonamen(sis)) என்பது கும்பகோணம் புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

பரப்பளவு 7,823 km2 (3,020 sq mi)

மக்கள் தொகை கத்தோலிக்கர் 195,582 (2004 இன் படி)

கதீட்ரல் புனித மரியன்னை கதீட்ரல்

வரலாறு

செப்டம்பர் 1, 1899: பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு குடந்தை மறைமாவட்டம் உருவானது.

சிறப்பு ஆலயங்கள்

சிறு பேராலயம்: பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்

தலைமை ஆயர்கள்

குடந்தை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி (மே 31, 2008 – இதுவரை)

ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (நவம்பர் 10, 1989 – ஜூன் 30, 2007)

ஆயர் டேனியல் பால் அருள்சுவாமி (மே 5, 1955 – ஆகஸ்ட் 16, 1988)

ஆயர் பீட்டர் பிரான்சிஸ் ராயப்பா (பிப்ரவரி 24, 1931 – செப்டம்பர் 20, 1954)

ஆயர் மரி-அகஸ்டின் சாப்புயிஸ், M.E.P. (மே 21, 1913 – டிசம்பர் 17, 1928)

ஆயர் ஹூகஸ்-மதலேன் பொத்தேரோ, M.E.P. (செப்டம்பர் 5, 1899 – மே 21, 1913)

குடந்தை மறைமாவட்டத்தின் இணையதளம்


நன்றி: விக்கிபீடியா