605 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அரும்பலூர்


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் 

இடம் : அரும்பலூர், போளூர் தாலுகா, மொடையூர் அஞ்சல். 

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : போளூர் 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித தோமினிக் சாவியோ ஆலயம், புலிவானந்தல்

பங்குத்தந்தை : அருள்பணி. M. பாக்கியராஜ் மோயீசன்

குடும்பங்கள் : 47

அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி மாலை 06.30 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் 29 ம் தேதி. 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்சகோதரி. ஷீபா, சலேசியன் 

2. அருள்சகோதரி. வேளாங்கண்ணி. 

வழித்தடம் : போளூர் -சேத்துப்பட்டு. 

ஆலய வரலாறு :

அரும்பலூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயமானது அமெரிக்காவைச் சேர்ந்த DE. Rance, INC நிதியுதவி மூலமாக கட்டப்பட்டு, 29.9.1977 அன்று வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. R. அந்தோணிமுத்து அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

தொடர்ந்து போளூர் ஆலயத்தின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த அரும்பலூர் ஆலயமானது, 2004 -ம் ஆண்டு புலிவானந்தல் தனிப் பங்காக ஆன போது அதன் கிளைப் பங்காக ஆனது.

RCM ஈராசிரியர் பள்ளிக்கூடம் சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. 

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பாக்கியராஜ் மோயீசன்.