418 புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், ஆசீர்புரம்


புனித ஆசீர்வாதப்பர் ஆலயம்

இடம் : ஆசீர்புரம், சின்னக்காம்பாளையம் (PO), தாராபுரம் தாலுகா.

மாவட்டம் : திருப்பூர்
மறை மாவட்டம் : கோவை
மறை வட்டம் : தாராபுரம்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித அந்தோனியார் ஆலயம், அலங்கியம்.

பங்குத்தந்தை : அருட்பணி. மார்ட்டின் MMI

துணைப் பங்குத்தந்தை : அருட்பணி. பென்சிகர் MMI

குடும்பங்கள் : 54

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 6:30 மணிக்கு ஜெபமாலை,
காலை 07:00 மணிக்கு திருப்பலி.

திங்கள் மாலை 6:30 மணிக்குஆராதனை ,
மாலை 07:00 மணிக்கு திருப்பலி.

செவ்வாய், புதன், வியாழன் : காலை 5:40 மணிக்கு ஆராதனை
காலை 06:00 மணிக்கு திருப்பலி.

வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஆராதனை.
மாலை .7:00 மணிக்கு திருப்பலி.

சனி மாலை 6:30 மணிக்கு ஜெபமாலை,
07:00 மணிக்கு திருப்பலி.

மாதத்தின் முதல் சனி மாலை 6:30 மணிக்கு ஜெபமாலை,
07:00 மணிக்கு திருப்பலி.
மற்றும் மாதா தேர்பவனி

திருவிழா : பிப்ரவரி மாதம் முதல் ஞாயிறு கொடியேற்றம். இரண்டாவது ஞாயிறு திருவிழா + தேர்பவனி.

வழித்தடம் :
தாராபுரம் -பொள்ளாச்சி சாலையில், சின்னக்காம்பாளையம் பிரிவில் இருந்து தெற்கு நோக்கி 2 கி.மீ தூரத்தில் ஆசீர்புரம் உள்ளது.

Location map :10°42'23.9"N 77°27'15.8"E
https://maps.app.goo.gl/69xF2AYiRFNULxU8A

வரலாறு :

அழகிய ஆசீர்புரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறு ஆலயம் கட்டப்பட்டு, தாராபுரம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. பின்னர் அருட்பணி. பா. இருதயசாமி பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 11.02.1987 அன்று மேதகு ஆயர் M. அம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தாராபுரம் பங்கின் கிளைப்பங்காக இருந்த போது, புனித இராயப்பர் சபை குருக்களின் வழிகாட்டுதலில் 60 ஆண்டுகளாக ஆன்மீகப் பயணத்தை சிறப்பாக தொடர்ந்தது ஆசீர்புரம் இறை சமூகம்.

பின்னர் 04.06.2017 அன்று தனிப்பங்காக உயர்த்தப் பட்டு, MMI சபை குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. துரை சேவியர் MMI அவர்கள் பொறுப்பேற்றார். துணைப் பங்குத்தந்தையர்களாக அருட்பணி. மார்சலின் மற்றும் அருட்பணி. சகாய ஜெனிபர் ஆகியோரும் இணைந்து பணியாற்றினர்.

23.04.2019 ல் அருட்பணி. மார்ட்டின் MMI அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்பாக ஆன்மீகப் பாதையில் வழி நடத்தி வருகிறார்.

மேலும் பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் அவர்களுடன் சில காலங்கள் அருட்பணி. ஆல்பர்ட் ராஜ் MMI அவர்கள் உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து தற்போது அருட்பணி. பென்சிகர் MMI உதவிப் பங்குத்தந்தையாக பணியாற்றுகிறார்.

புனித லூர்து அன்னை கெபி :

07.10.2016 அன்று அருட்பணி. A. M. ஜோசப் தன்ராஜ் அவர்களால் புனித லூர்து அன்னை கெபிக்கு அடிக்கல் போடப்பட்டு, ஆசீர்புரம் இறை மக்களின் உழைப்பாலும் நன்கொடைகளாலும் அழகுற கட்டப்பட்டு, 19.02.2017 அன்று கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இந்த அழகிய லூர்து அன்னை கெபி -யில் ஏராளமான புதுமைகள் நடந்து வருவதால், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து ஜெபித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. மார்ட்டின் MMI