மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
பங்குத்தந்தை: பேரருட்பணி. மார்ட்டின் மனுவேல் (வடக்கன்குளம் வட்டார முதன்மை குரு)
இணை பங்குத்தந்தை: அருட்பணி. G. பிரதாப்
கிளைப் பங்குகள்:
1. புனித சவேரியார் ஆலயம், ஆவரைக்குளம்
2. புனித ஜார்ஜியார் ஆலயம், புதியம்புத்தூர்
சிற்றாலயங்கள்:
1. புனித மிக்கேல் அதிதூதர் சிற்றாலயம்
2. புனித அந்தோணியார் சிற்றாலயம்
3. புனித செபஸ்தியார் சிற்றாலயம்
4. புனித ஜார்ஜியார் சிற்றாலயம்
5. புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலயம்
6. புனித காணிக்கை அன்னை சிற்றாலயம்
7. அற்புத மாதா சிற்றாலயம்
8. வியாகுல அன்னை சிற்றாலயம்
9. நற்கருணை ஆலயம்
குடும்பங்கள் : 1700
அன்பியங்கள் : 47
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி : காலை 05:00 மணி, காலை 07:00, காலை 09:30 மணி, மாலை 05:30 மணி செபமாலை, திவ்ய நற்கருணை ஆசீர்.
வார நாட்களில் திருப்பலி: காலை 05:00 மணி, காலை 06:10 மணி
வாரநாட்களில் மாலை 05:30 மணி சிற்றாலயங்களில் திருப்பலி
வெள்ளிக்கிழமை: மாலை 03:00 மணி இறை இரக்க வழிபாடு
சனிக்கிழமை : மாலை 06:30 மணி சகாய மாதா நவநாள், திவ்ய நற்கருணை ஆசீர்
மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை பரிசுத்த பரலோக அன்னை பரிகார பக்தி முயற்சி. மாலை 06:30 மணிக்கு அன்னையின் பவனி, பரிசுத்த புதுமை பரலோக அன்னையின் நவநாள், திவ்ய நற்கருணை ஆசீர்
மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமை : மாலை 06:30 மணிக்கு புனித தேவசகாயம் சுரூப பவனி, நவநாள், திவ்ய நற்கருணை ஆசீர்
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 06-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்
பரிசுத்த புதுமை பரலோக அன்னையின் காட்சிப் பெருவிழா : அக்டோபர் 23-ம் தேதி.
புனித தேவசகாயம் திருமுழுக்கு விழா : மே மாதத்தில் 14-ம் தேதி.
வடக்கன்குளம் மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்திரு. சந்தன மரியான்
2. அருட்திரு. M. தர்மநாதர்
3. அருட்திரு. A. ஜெகநாதர்
4. அருட்திரு. A.M. சூசைநாதர் VG
5. அருட்திரு. ஞானப்பிரகாசியார்
6. அருட்திரு. சிலுவை
7. அருட்திரு. ஞானமணி
8. அருட்திரு. S.நிக்கோலாஸ்
9. அருட்திரு. S. கப்ரியேல்
10. அருட்திரு. S.பிரான்சீஸ்கு
11. அருட்திரு. மரிய வியாகுலம்
12. அருட்திரு. S. ஆர்தர் ஜேம்ஸ்
13. அருட்திரு. சூசை மாணிக்கம்
14. அருட்திரு. S. பனிமய ரொனால்டோ
15. அருட்திரு. அத்தானிசியூஸ் ஜோ
16. அருட்திரு. சைமன் ஆல்ட்ஸ்
வடக்கன்குளம் தந்த அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. அற்புத மரியம்மாள்
2. அருட்சகோதரி. ஜோஸ்பின் பிரேமா
3. அருட்சகோதரி. அமலதாஸ்
4. அருட்சகோதரி. லூயிஸ் கரோலின்
5. அருட்சகோதரி. லூசியா
6. அருட்சகோதரி. ரோஸ்லின்
7. அருட்சகோதரி. குணகுந்தா
8. அருட்சகோதரி. அனன்சியா தெரஸ்
9. அருட்சகோதரி. ஹென்றிட்டா
10. அருட்சகோதரி. தெரசா
11. அருட்சகோதரி. எமரன்சியா
12. அருட்சகோதரி. மார்சலின்
13. அருட்சகோதரி. ஜோஸ்பினா
14. அருட்சகோதரி. ஜெயின்
15. அருட்சகோதரி. அமலினா
16. அருட்சகோதரி. கியூபெட்டா
17. அருட்சகோதரி. பிரின்ஸி
18. அருட்சகோதரி. ஜெஸிந்தா
வழித்தடம்: திருநெல்வேலி -காவல்கிணறு விலக்கு -வடக்கன்குளம்
Map location: https://maps.app.goo.gl/CM1cj8tJ9JTz5Nuo7
வரலாறு:
வடக்கன்குளம் ''சின்ன ரோமாபுரி'' திருத்தல வரலாறு:
தூத்துக்குடி மறைமாவட்ட புவியியல் வரைபடத்தின் கடலோரப் பகுதியல்லாத முதல் திருச்சபை வடக்கன்குளம் ஆகும். மதுரை மிஷனின் தென்மேற்கு பிரதேசத்தின் கடைசி திருச்சபை இதுவாகும். 1680 ஆம் ஆண்டு தோப்புவிளையில் இருந்து இடம்பெயர்ந்து வடக்கன்குளத்தில் குடியேறிய முதல் கிறிஸ்தவ பெண் சாந்தாய். காமநாயக்கன்பட்டி பங்குதந்தையாக இருந்த இயேசு சபையைச் சார்ந்த ஜான் டி பிரிட்டோ அவர்கள் குதிரையில் பயணம் செய்தபோது வடக்கன்குளத்தில் கிறிஸ்தவ குடும்பங்களை சந்தித்தார். 1685 ஆம் ஆண்டில் அவர் வடக்கன்குளம் கிறிஸ்தவ மக்களுக்காக ஒரு சிறிய ஓலை தேவாலயத்தை அமைத்து, அதை திருக்குடும்பத்திற்கு அர்ப்பணித்தார். அவர் 1686 இல் 200 க்கும் மேற்பட்ட மக்களுக்கு திருமுழுக்கும் கொடுத்தார். இறுதியில் கிறிஸ்துவின் மீதான நம்பிக்கை வடக்கன்குளத்தில் முளைத்தது. அது கொச்சி இயேசு சபையின், நேமம் மிஷன் மையத்துடன் இணைக்கப்பட்டது.
அருட்திரு. ஜான் டி பிரிட்டோவுக்குப் பிறகு, அருட்திரு. பெர்னாட் டி சூசா அடிகள் 1699-இல் வடக்கன்குளத்தின் முதல் பங்குத்தந்தையானார். இவர் மருங்கூரில் பலரை மதமாற்றத் தொடங்கினார். 1742 ஆம் ஆண்டில், வடக்கன்குளத்திற்கு கப்பலில், போர்ச்சுகலில் இருந்து வடக்கன்குளம் என்ற முத்திரையுடன் கூடிய ஒரு மரப்பெட்டியில் மூன்று அன்னையின் சுரூபங்களுடன் வந்தது. கடலின் நீரோட்டத்தால் பெட்டியானது கப்பலில் இருந்து விழுந்து, கூட்டப்புளியின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியது. அதை மீனவர்கள் எடுத்து வடக்கன்குளம் பங்குத்தந்தை மறைதிரு. ஜாண் பாப்டிஸ்ட் புட்டாரி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். ஒன்று காமநாயக்கன்பட்டிக்கும், மற்றொன்று வடக்கன்குளத்திலும், மற்றொன்று அப்போதைய மறைமாவட்ட ஆயர் அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.
புனித தேவசகாயம் 14.05.1745 அன்று வடக்கன்குளத்தில் அருள்தந்தை புத்தேரி அவர்களால் ஞானஸ்நானம் பெற்றார். புனித தேவசகாயத்தின் தலைப்பாகை திருக்குடும்ப தேவாலயத்தில் பாதுகாக்கப்படுகிறது. 1766 - புனித தேவசகாயம் மனைவி ஞானப்பூ அம்மாள் 14 வருடம் இங்கு வாழ்ந்து இறந்து, இங்குள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
23.10.1803 அன்று காலை 11.20 மணியளவில் சவரிமுத்து என்பவர் பீடத்தின் முன்னால் முழந்தாட்படியிட்டு செபித்துக்கொண்டிருந்தார். திடீரென்று மாதாவின் முகம் ஒருவித மேகத்தால் மங்கியது. பவளம் போன்ற கன்னங்களின் மேல் கண்ணீர் வழிந்தோடியது. நெஞ்சில் குவிந்திருந்த இரண்டு கரங்கள் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தன. இந்த அற்புதக்காட்சியைக் கண்ட சவரிமுத்து திகிலடைந்தார். பங்குத் தந்தையிடம் ஓடோடிச் சென்று விபரத்தைக் கூறினார். சக்கரீஸ்து உபதேசியார் வியாகப்பர் ஆகியோர் வந்து இந்தக் காட்சியைக் கண்டு, அனைவரும் வியப்படைந்தனர். மேலும் ஊரில் தங்கியிருந்த ஜரோப்பிய பெண்மணி பில்பெக் என்ட்ரிக் அம்மாள் ஓடி வந்து இக்காட்சியைக் கண்டாள். அவ்வம்மையார் அருகில் சென்று நுணுக்கமாகச் சோதித்துப்பார்த்து வியப்படைந்தார். பரிசுத்த தேவமாதா சுரூபத்தில் காணும் மூன்று விதத் தோற்றங்களும் உறுதி உண்மையானவை. மற்ற புனிதர்களின் முகங்களும் துக்ககரமாகக் காண்பதும் மெய். இதனை உறுதிப்படக் கூறுகின்றேன் என்றார். இவை அனைத்தும் அற்புதமான புதுமை என்று பங்கு குரு ஜாண் லூயிஸ் கர்டோஸா அடிகள், பெஸ்கி அடிகள், பில்பக் என்ட்ரிக் அம்மாள் ஆகிய மூவரும் சேர்ந்து வெளிப்படுத்தினார்கள். எனவே கோயில் மணி அடிக்கப்பட்டது. ஊர் மக்கள் வந்து கூடினார்கள். பரலோக மாதா சுரூபம் கரம் விரித்துக் கண்ணீர் ததும்பி ஓடி, பவளக் கன்னங்களின் வழியாக வருவதைக் கண்டு மக்கள் பிரமித்து, பயத்தாலும், அதிசயத்தாலும் பரவசமானார்கள். அந்த நேரத்தில் உபதேசியார் மதுரேந்திர அண்ணாவியார் பயபக்தியுடன் பீடத்தின் மேல் ஏறி மாதாவின் முகத்தின் கண்ணீரைத் துடைத்தார். கண்ணீர் நின்ற பாடு இல்லை. தாரை தாரையாகக் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் பயந்தனர். இதய உருக்கம் எவ்வளவென்று சொல்ல முடியாது. பீடத்தில் உபதேசியார் மெழுகுதிரிகளை ஏற்றினார். எல்லோரும் முழந்தாட்படியிட்டு “என் பாவமே, என் பெரும் பாவமே” என்ற ஜெபத்தை நெஞ்சில் பிழை தட்டிக்கொண்டு சொன்னார்கள்.
பொறுத்தருளும் கர்த்தாவே உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும், என்றெக்கும் எங்கள்மேல் கோபமாக இராதேயும் என்ற ஜெபத்தை மும்முறை பக்தி உருக்கத்துடன் செபித்து முடிக்கவே, மக்களின் கண் பார்வையிலேயே இரண்டு கரங்களும் மெதுவாகச் சுருங்கின சுரூபத்தின் தோற்றங்களும் மறைந்து இயற்கைச் சாயலாக முன்பு இருந்தது போல் மாறியது அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்து, மாதாவுக்கு நன்றியறிந்த தோஸ்திரம் புரிந்து தத்தம் இல்லம் சென்றனர். வரலாற்றுத் தோற்றம் 'La Mission Du Madure' வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கி.பி. 1850 –1852 ல் பிரான்சு நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், செல்வந்தருமான திரு. ஹென்டிரிக் என்பவர் தமது துணைவியுடன், உலக சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். சுற்றுப் பயணத்தின் போது மதுரை மாநகரம் வந்து சேர்ந்தனர். வடக்கன்குளத்தில் மாதா காட்சி கொடுத்துள்ள விபரங்களை மதுரை மிஷனரியின் அறிக்கைகளின் வாயிலாக அறிந்தனர். எனவே காட்சி கொடுத்துள்ள மாதாவை நேரில் தரிசனம் செய்து வரவேண்டும் என்று விரும்பி, வடக்கன்குளம் வந்து சேர்ந்து, மாதாவை தரிசனம் செய்து கண்ணீர் வடித்தனர். அவர்களுக்குத் திருமணமாகி 27 ஆண்டுகளாகியும் குழந்தைகளில்லை. பொருட்செல்வம் முதல் அனைத்துச் செல்வங்களிருந்தும், குழந்தைச் செல்வம் இல்லாமலிருப்பது அவர்களுக்கு பெருங் குறையாகவே இருந்தது. தூய கன்னிமரியாள் காட்சி கொடுத்த தாய், எப்படியும் நம் மன்றாட்டை கேட்டு அருள்புரிவாள். தோன்றி மறைந்தவளல்ல நிரந்தரமாகவே உயிரோவியத்துடனிருந்த காட்சியளிக்கும் தாய், நம்மைக் கைவிட மாட்டாள் என்று பூரண நம்பிக்கை கொண்டவர். “நமது மன்றாட்டு கேட்கப்பட்டது” என்று மனப்பூர்வமாகவே விசுவாசித்தனர். தங்களது சுற்றுப்பயணத்தை தொடர்ந்தனர்.
ஹென்டிரிக் குடும்பத்தினர் ஓராண்டுக்குள் ஓர் அழகிய ஆண்குழந்தையைப் பெற்று அகமகிழ்ந்தனர். 27 ஆண்டுகளாகக் குழந்தையில்லாமல் பட்ட கவலை அற்புதமாகவே நீக்கப்பட்டது. உள்ளம் பூரிப்படைந்தனர். அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அவர்களது வாழ்வையே மலரச் செய்துள்ள பரலோக இராக்கினிக்கு என்ன செய்வதென்று அறியாது திணறினர். திகைத்து சிந்தனையிலாழ்ந்தனர். மதுரை சேசு சபை வேத போதகர்களுடன் தொடர்பு கொண்டனர். சேசு சபை வேத போதகர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு, மாதாவுக்கு நவீனமானதொரு உலகப் பிரசித்திப் பெற்ற ரோமாபுரி பேராலயம் போன்று ஆலயம் கட்டுவதென முடிவு செய்துள்ளனர். எனவே கி.பி. 1855ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி பங்குத்தந்தை அருட்திரு. ஜோசப் கிரகோரி சுவாமிகளும் சேசுசபை குருக்கள் மற்றும் பெர்க்கடைல் என்ற சந்நியாசியும் ஊர் பொதுமக்களும் புடை சூழ்ந்து நிற்க, கொல்லம் மறைமாவட்ட ஆயர் மேதகு கோனோஸ் அலக்சியூஸ் அவர்கள் முதல்கல்லை ஆசீர்வதித்து மூலைக்கல்லாக நாட்டினார்கள். சேசுசபை மறைப்போதகர்களின் மேற்பார்வையில் பங்குத்தந்தைகளும், ஊர் பொது மக்களும் பூரண ஒத்துழைப்பு கொடுத்தனர். இம்மாபெரும் ஆலயம் நவீன வேலைப்பாடுகளுடன், எந்த விதமான உத்திரங்களும் இல்லாமல், ஐரோப்பிய கோத்திக் முறையில் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோயில் கட்டிமுடிப்பதற்கு 17 ஆண்டுகளாயின. 1872 ஆம் ஆண்டு சங். பெனடிக்ட் அடிகளார் காலத்தில் கலைப்பொலிவுடன் தலைநிமிர்ந்து நிற்கும் இவ்வாலயம் சங். பெனடிக்ட் அடிகள் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது.
ஆலய அமைப்பு:
இவ்வாலயம் முக்கோண வடிவம் ஓவல் வடிவமாகவும் தோன்றும், பீடத்தில் நின்று பார்க்கும்போது யு வடிவமாகத் தோன்றும். சிலர் நினைப்பது போல இரட்டைக் கோயிலாகவும் தெரியும். இந்த அமைப்பு கற்பணைக்கும் எட்டாத நவீனமானது. உள்ளே நுழைவதற்கு மூன்று திசைகளிலும் ஐந்து வாசல்களுண்டு. தலை வாயில் வழியாக ஆலயத்தினுள்ளே நுழையும் போது பரிசுத்த திருக்குடும்பம்: அன்பு மக்களே, உங்களது இதயத்தை எமக்குத் தந்திட உள்ளே வாருங்கள்…! என்று எழில் முகத்துடன் அழைக்கின்றது! அன்பு உணர்வூட்டும் காட்சியால் உள்ளே நுழைந்து பார்க்கும்போது பிரமிப்படைகின்றோம். நுட்பகரமான வேலைப்பாடு, ஆலய திருப்பீடம் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேர்முகமாகவே தெரியும். எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் பரலோக அன்னை உயிரோவியத்துடன் புன்சிரிப்புடன் நம்மையே நோக்குவது விசித்திரமானது.
அந்தக்காலம் பதனீர், சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை போன்றவைகளை இணைத்து அரைத்துதான் பெரிய பெரிய கட்டிடங்களை எழுப்புவது இயற்கை. என்றாலும் இந்த அமைப்பில் கட்டுவது சாதாரண காரியமல்ல. வியக்கத்தக்க வானளாவிய வளைவுகள், (டூம்கள்) இவைகளைத் தாங்குவதற்கு உத்திரங்களோ, கட்டைகளோ அல்லது இரும்புகளோ இல்லை. இவைகள் இல்லாமல் இவ்வாறு கட்டப்பட்டிருப்பது ஆச்சரியம்! பீடத்தின் நடுவில் ஒரு பெரிய சிலுவையில் தொங்கும் தேவகுமாரன், “வாருங்கள் என்னருகில், தொட்டுப்பாருங்கள் என்னை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்” என்று எம்பெருமான் உயிரோடு பேசுவது போல் காட்சியளிக்கிறார். ‘வருத்தத்தினால் பாரம் சுமக்கவில்லை, உங்களது பாவங்களையே பாரமாகச் சுமக்கிறேன்’ என்று சொல்லுவது தத்ரூபமாகவே உணர வைக்கிறது.
வாயிலிலிருந்து பீடத்தை சென்றடையும் படிகள் செங்குறுதி செம்மல் இயேசுகிறிஸ்துவின் 14 ஸ்தலங்ளை நினைவூட்டுகின்றனர்.
பீடத்தின் மேல் வரிசையில் அமைந்திருக்கும் ஐந்து பெரிய சுரூபங்களைத் தாங்கி நிற்கும் ஐந்து வளைவுகளும் மனுமகனாகப் பிறந்து சிலுவையில் அறையுண்ட யேசுபிரானின் ஐந்து காயங்களை நினைவு படுத்தியுள்ளனர்.
இதோடு இணைந்துள்ள கோபுரம் 9 கோபுரம் போன்ற ஒன்பது பூங்கொத்து சிலைகளும் ஒன்பது சம்மனசுகளை நினைவுறுத்தியுள்ளனர்.
பீடத்தின் கீழ்ப்பகுதியில் 12 சீடர்கள் நினைவுறுத்தும் வகையில் 12 சீடர்கள் சுரூபம் உள்ளது.
பீடத்தின் அடிவரிசையில் அமைந்துள்ள நான்கு வளைவுகளில், நான்கு நற்செய்தி தூதுவர்களையும் நினைவுச்சின்னமாகவே அமைந்துள்ளனர்.
திருத்தல வளர்ச்சிப் படிகள்:
1680 - சாந்தாயி அம்மாள் என்ற முதல் கிறிஸ்தவ பெண்மணி குடும்பத்துடன் இங்கு குடியேறினார்.
1686 - புனித அருளானந்தர் கொச்சியிலிருந்து இங்கு வந்து குடிசை கோவிலை கட்டி, 200க்கும் அதிகமானோருக்கு திருமுழுக்கு கொடுத்தார்.
1700 -காமநாயக்கன்பட்டியிலிருந்து பிரிந்து தனிப் பங்காக உருவானது. அருட்திரு. பெர்னார்ட் டி சூசா முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.
1708 - இப்பங்கு நேமம் பணித்தளத்தோடு இணைக்கப்பட்டு, குருக்கள் இல்லமும் கட்டப்பட்டது.
1715-1716 - வீரமாமுனிவர் இங்கு தங்கி புனித திருப்பணி செய்தார்.
1742 - வடக்கன்குளம் என்ற பெயரில் மரப்பேழையில் கடலில் மிதந்து வந்த மாதா சுரூபம் ஆலயத்தில் நிறுவப்பட்டது.
1745 - புனித தேவசகாயம் இங்கு மே 14-ம் தேதி திருமுழுக்குப் பெற்றார்.
1752 - சிலுவை வடிவ ஆலயம் கட்டப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது.
1766 - புனித தேவசகாயம் மனைவி ஞானப்பூ அம்மாள் 14 வருடம் இங்கு வாழ்ந்து இறந்து, இங்குள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1803 - அக்டோபர் 23ல் பரலோக அன்னை கண்ணீர் சிந்தி, கரம் விரித்து காட்சி கொடுத்தார்கள். ஆண்டுதோறும் இந்நாளில் சிறப்பு ஆராதனை, பிரார்த்தனையும் நடைபெறுகிறது.
1855 - ஆகஸ்ட் 9ம் தேதி கொல்லம் மறைமாவட்ட ஆயர் ஆசியுடன் தற்போதைய பெரிய கோவில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
1861 - ஆலய மணிகள் இரண்டும் பிரான்சு நாட்டில் தயாரிக்கப்பட்டு, காசிமர் கிரகி என்ற பிரஞ்சுக்காரரால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது.
1862 - வியாகுல மாதா சபையின் 2-வது மடம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
1872 - மாதாவின் ஆசியால் குழந்தை வரம் பெற்ற பிரான்சு நாட்டு அரச குடும்பத்தைச் சார்ந்த ஹென்ரிக் என்பவரின் உதவியால், எந்த விதமான உத்திரங்களும் இல்லாமல் ஐரோப்பிய கோத்திக் முறையில் 17 ஆண்டுகள் இந்த ஆலயம் கட்டப்பட்டு, ஜூன் 29 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
1910-1919 - திரு இருதய சகோதரர்கள் சபையை நிறுவிய இறை ஊழியர் கௌசானல் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது புதுமைகள் பல நடந்தன.
1923 - தூத்துக்குடி மறைமாவட்டம் உருவான போது இந்த பணித்தளம் மறைவட்டமாக உயர்வு பெற்றது.
1926 - தூத்துக்குடி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் Most Rev. Dr. பிரான்சிஸ் திபூர்சியுஸ் ரோச் S.J., வடக்கன்குளத்தை அதன் முக்கியத்துவம் காரணமாக "சின்ன ரோமாபுரி" என்று அழைத்தார்.
1944 - இறை ஊழியர் சூசைநாதர் அடிகளார், செபமாலை தாசர் சபையின் முதல் இந்திய மடத்தை இங்கு நிறுவினார். அந்த மடத்தில் அவரின் கல்லறை உள்ளது.
1993 - திருக்குடும்ப தேவாலயம் திருத்தலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
2022 - திருக்குடும்ப ஆலயத்தின் 150 ஆண்டுகள் நிறைவு விழாவும், புனித தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கியதற்கு நன்றி விழாவும், மேதகு கர்தினால் பூலா அந்தோணி அவர்களின் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது.
ஆலய மணிகள்:
கி.பி. 1861ல் பங்குத் தந்தையாக இருந்த ஜோசப் கிரகோரி சுவாமிகள் காலத்தில் ஆலயக் கட்டுமானப்பணிகள் நடந்து வந்தன. அந்தக் காலக்கட்டத்தில் பிரான்சு நாட்டில் ஆலயத்திற்கான இருமணிகளும் லியான் நகரில் பர்டின் என்பவரால் 1861ல் செய்யப்பட்டன. இவைகளை காசிமர் கிரகி என்ற பிரெஞ்சுக்காரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். மணிகள் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, கடல் மார்க்கமாய் சென்னை துறைமுகம் வந்திறங்கி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்தன. 1872-ல் ஆலயத்தில் மணிகள் நிறுவப்பட்டன.
கெபிகள்:
லூர்து அன்னை கெபி
மரியன்னையின் காட்சிகளைக் கெபியாக அல்லது கோவில் போன்று வடித்து, பெரிய கோவிலுக்குத் துணைக்கோவிலாகக் கோவில் வளாகத்திலேயே கட்டியெழுப்பும் முறை கத்தோலிக்கர்களிடையே உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அவ்வண்ணமே திருக்குடும்ப ஆலய வளாகத்தின் வடக்குப்பகுதியில் வியாகுல அன்னை துறவற கன்னியர் மடத்திற்குத் தென்பகுதியில் முன்னாள் பங்குத்தந்தை மறைதிரு. அலாய். M. நவமணி அடிகளார் முயற்சியால், ஊர் மக்களின் ஒத்துழைப்புடனும், திரு. R.S. மரியான் அவர்களின் நன்கொடையாலும் புனித லூர்து அன்னை கெபி உருவாக்கப்பட்டது.
13.08.1959ம் நாள் கோட்டாறு மறைமாவட்ட மேதகு ஆயர் ஆஞ்ஞி சுவாமி ஆண்டகை அவர்களால் லூர்து அன்னை கெபி புனிதப் படுத்தப்பட்டது. 1984ம் ஆண்டு லூர்து அன்னை கெபியின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் லூர்து அன்னை திருவிழா பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாட்களும் மாலையில் நவநாள் ஜெபமும் நற்கருணை ஆசிரும் கெபியில் வைத்து நடைபெறுகிறது.
பயணிகள் மாதா கெபி:
1982ம் ஆண்டு மறைதிரு. பீட்டர் ராஜா அடிகளாரின் முயற்சியால் பயணிகளுக்கு உறுதுணையாக நின்று பாதுகாப்பளிக்கும் பயணிகள் மாதா கெபி கட்டப்பட்டது. கெபியின் முன்புறம் குருசடி ஒன்றும் அமைந்துள்ளது. பயணம் மேற்கொள்ளும் மக்கள் இக்குருசடியை வணங்கிச் செல்வது காலங்காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் ஏதேனும் வேண்டுதல் செய்து குருசடியில் பால், எண்ணெய் ஊற்றுவதும், அசனங்கள் நடத்துவதும் மக்களின் நம்பிக்கை முயற்சியாக இருந்து வருகிறது. பயணிகள் மாதா கெபியானது பேரருட்திரு. ததேயுஸ் அடிகள் காலத்தில் புனரமைக்கப்பட்டது. 25.12.2014 அன்று அர்ச்சிக்கப்பட்டது. வடக்கன்குளத்தின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று மரியன்னையின் தேர். அது வடவை சிற்பிகளின் பொற்கரங்களால் இலுப்பை, தேக்கு, வேங்கை மரங்களால் செய்யப்பட்ட 35 அடி உயரம் கொண்ட தேர் 1891ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த தேர் தற்போது பயணிகள் மாதாவாகிய அமல அன்னையைத் தாங்கும் தவப்பீடமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சகாய மாதா கெபி [மங்கம்மாள் சாலை]:
சகாய மாதா கெபி காவல்கிணற்றுக்கும், வடக்கன்குளத்திற்கும் எல்லையாக அமைந்திருக்கின்ற மங்கம்மாள் சாலையில், திரு. L. டார்சிங் - கல்பனா குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் மற்றும் சகாய மாதா கெபியை வடவை பரிசுத்த திருக்குடும்ப திருத்தலத்திற்குக் கொடுத்தனர். 30.07.2022 அன்று வடவை திருக்குடும்ப ஆலயத்திலிருந்து மக்கள் திருப்பயணமாகச் சென்றனர். கெபி பேரட்திரு. ஜான் பிரிட்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்களும் திருப்பயணிகளும் கெபியில் செபித்து ஆசீர்பெற்று வருகின்றனர்.
புனித அருளானந்தர் கெபி:
போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நரைச் சேர்ந்தவர் ஜாண் டி பிரிட்டோ என்று அழைக்கப்படும் அருளானந்தர். இவர் 1647-ல் பிறந்தார். 1684-1685 வரை காமநாயக்கன்பட்டியில் பங்குக் குருவாகப் பணியாற்றினார். அப்போது வடக்கன்குளம் வந்து மக்களை இறைவழியில் நடத்தினார். எனவே 1685-ல் வடக்கன்குளத்தில் முதன்முதலாக திருக்குடும்ப ஆலயம் கட்டிக் கொடுத்து கிறிஸ்தவம் மலர்ந்திட வழிவகுத்தார். அவரின் வழியில் இறைப்பணியாற்றிவந்த, அருட்தந்தை பேரருட்திரு. ஜாண் பிரிட்டோ அடிகள் அவர்களால் மாதா கலையரங்கம் அருகில் அருளானந்தர் கெபி அமைக்கப்பட்டு 06.08.2019 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
துறவற இல்லங்கள்:
மரியின் ஊழியர் இல்லம்
(வியாகுல மாதா கன்னியர் மடம்)
புனித வளனார் குருக்கள் இல்லம் (அமலிவனம்) ஓய்வு பெற்ற அருட்தந்தையர்கள் இல்லம்
பங்கின் பள்ளிகள் :
1. புனித தெரசாள் தொடக்கப்பள்ளி
2. புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளி
3. திருக்குடும்ப நடுநிலைப்பள்ளி
4. புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. பாலர் சபை
2. நற்கருணை வீரர் சபை
3. புனித மரியா கொரற்றி சபை
4. புனித டோமினிக் சாவியை சபை
5. புனித டோன்போஸ்கோ இளைஞர் சபை
6. அமல அன்னை இளம்பெண்கள் சபை
7. மரியாவின் சேனை
8. புனித வின்சென்ட் தே பவுல் சபை
9. திருக்குடும்ப சபை
10. மறைக்கல்வி
11. பெத்தானியா அருட்சகோதரிகள் சபை
12. பங்குப் பேரவை
குடும்ப நலப் பணிக்குழுக்கள்:
1. திருமண தயாரிப்பு பயிற்சி மையம்
2. பிஷப் ஸ்டீபன் குடும்ப ஆலோசனை மையம்.
வடக்கன்குளத்தில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
அருட்திரு. பெர்னாட் டி சூசா 1698-99
அருட்திரு. மரிய போர்க்கீஸ் 1700-1704
அருட்திரு. பீட்டர் மார்ட்டின் 1705-1707
அருட்திரு. சைமன் கார்வெல்லோ 1708-1708
அருட்திரு. போர்க்கீஸ் 1709-1710
அருட்திரு. லூயிஸ் நோவேல் 1711-1712
அருட்திரு. இக்னேசியஸ் கர்டோசா 1712-1712
அருட்திரு. பூர்சல் 1713-1713
அருட்திரு. பெர்னாடிசா 1714-1714
அருட்திரு. அந்தோணி பிராண்டோலின் 1715-1715
அருட்திரு. அலெக்சாண்டர் 1716-1716
அருட்திரு. டொமினிக் மடேயரா 1717-1727
அருட்திரு. கிலியா 1728-1728
அருட்திரு. தாமஸ் கியூலானி 1729-1733
அருட்திரு. ஜோசப் சில்வேரியா 1734-1740
அருட்திரு. ஜாண்பாப்டிஸ்ட் புட்டாரி 1741-1750
அருட்திரு. பிரான்சிஸ் தோமாசினி 1751-1775
அருட்திரு. தேவ வரதனார் 1776-1791
அருட்திரு. இக்னேசியஸ் 1792-1802
அருட்திரு. ஜாண்லூயிஸ் கர்டோசா 1803-1803
அருட்திரு. பிரான்சிஸ் டி மிராண்டா 1804-1808
அருட்திரு. சேவியர் ஜிஸ்டாண்டு 1809-1826
அருட்திரு. ஜேக்கப் பத்தாம் பேரே 1827-1831
அருட்திரு. மிக்கேல் பிராஸ் 1832-1835
அருட்திரு. தைரியநாதர் 1836-1837
அருட்திரு. அலக்சாண்டர் மார்ட்டின் 1838-1838
அருட்திரு. லூயிஸ் தூராங்குவே 1839-1840
அருட்திரு. அன்றோனின் சேலஸ் 1841-1841
அருட்திரு. காஸ்டானியர் 1842-1843
அருட்திரு. ஜோசப் கிரகோரி 1844-1844
அருட்திரு. லூயிஸ் வேர்டியர் 1847-1850
அருட்திரு. ஜெரோம் மெஸ் 1851-1852
அருட்திரு. ஜோசப் கிரகோரி 1853-1861
அருட்திரு. காஸ்டானியர் 1862-1865
அருட்திரு. ஜோசப் கிரகோரி 1866-1870
அருட்திரு. பௌகட் 1870-1873
அருட்திரு. வில்லியம் பேஜெட் 1873-1874
அருட்திரு. பிரட்ரிக்கா போஸ் 1875-1875
அருட்திரு. விக்டர் டெல்பீச் 1876-1876
அருட்திரு. ஜோசப் பெஸ்ஸரல்லே 1877-1882
அருட்திரு. வில்லியம் புக்கே 1882-1893
அருட்திரு. ஜோசப் சங் பாஸ்கல்லே 1894-1895
அருட்திரு. அடைக்கலம் 1895-1896
அருட்திரு. பீட்டர் புருண்ட் இன்டோரியம் 1896-1897
அருட்திரு. கபிரியேல் பெரிதியூ 1897-1898
அருட்திரு. சின்னப்பர் 1899-1899
அருட்திரு. தைரியநாதர் 1899-1910
அருட்திரு. அதரியான் கௌசானல் 1910-1919
அருட்திரு. போனோர் 1919-1923
அருட்திரு. இன்னாசியார் 1924-1936
அருட்திரு. மரியதாஸ் 1936-1943
அருட்திரு. சுவக்கின் 1943-1948
அருட்திரு. பெனடிக்ட் 1949-1954
அருட்திரு. அலாய் ஆ. நவமணி 1954-1960
அருட்திரு. மரியஞானம் 1960-1974
அருட்திரு. அந்தோனி 1974-1981
அருட்திரு. பீட்டர்ராஜா 1981-1985
அருட்திரு. குருசுமரியான் 1985-1988
அருட்திரு. ஜோசப் டி ரோஸ் 1988-1990
அருட்திரு. இருதயராஜ் 1990-1995
அருட்திரு. மரியதாஸ் 1995-1997
அருட்திரு. ஜோசப் டி ரோஸ் 1997-1998
அருட்திரு. தியோபிலஸ் 1998-2003
அருட்திரு. பன்னீர் செல்வம் 2003-2008
அருட்திரு. நெல்சன் பால்ராஜ் 2008-2013
அருட்திரு. ததேயுஸ் ராஜன் 2013-2018
அருட்திரு. ம. ஜாண் பிரிட்டோ 2018-2023
அருட்திரு. மார்ட்டின் 2023-
உதவி பங்குத்தந்தையர்கள்:
அருட்திரு. சலேஸ் 1870
அருட்திரு. பெர்ச் லார்ட் 1870-1875
அருட்திரு. ஹல்லர் 1875-1876
அருட்திரு. டெல்பெச் 1876-1887
அருட்திரு. காபோஸ் 1875
அருட்திரு. பெர்னாண்டஸ் 1876
அருட்திரு. பேஃஸ் மில்லர் 1876-1881
அருட்திரு. அடைக்கலம் 1887-1890
அருட்திரு. கலியன் 1889-1893
அருட்திரு. பேஃஸ் மில்லர் 1894-1896
அருட்திரு. பிரான் 1896-1897
அருட்திரு. பெர்னாண்டஸ் 1898-1901
அருட்திரு. சந்தியாகு 1901-1902
அருட்திரு. பரஞ்ஜோதிநாதர் 1902-1906
அருட்திரு. எலியஸ் 1907-1909
அருட்திரு. ஞானசுவாமி 1909-1910
அருட்திரு. மாசிலாமணி 1910-1912
அருட்திரு. அற்புதம் 1913-1915
அருட்திரு. பொனூர் 1913-1915
அருட்திரு. லூர்துசுவாமி 1916-1919
அருட்திரு. வேப் லார்ட் 1919-1921
அருட்திரு. மிக்கேல் 1921-1923
அருட்திரு. சிலுவை 1923
அருட்திரு. ஸ்தனிஸ்லாஸ் 1924-1928
அருட்திரு. தைரியநாதர் 1929-1931
அருட்திரு. மரியதாஸ் பர்னாந்து 1930
அருட்திரு. பூபால்ராயர் 1934-1935
அருட்திரு. தாசன் தல்மெய்தா 1937-1938
அருட்திரு. ரொசாரி கொறைரா 1938
அருட்திரு. சுவக்கீன் பர்னாந்து 1938-1939
அருட்திரு. மரிய ஜோசப் 1939-1940
அருட்திரு. அகஸ்டின் பர்னாந்து 1940-1943
அருட்திரு. பிரான்சிஸ் 1944-1945
அருட்திரு. தேவசகாயம் 1948
அருட்திரு. ரிச்சர்ட் ரொட்ரிகோ 1949-1950
அருட்திரு. ஐரோமியாஸ் அரசரத்தினம் 1952-1953
அருட்திரு. அகஸ்டின் 1957
அருட்திரு. மொருதகம் ஹெர்மஸ் 1960-1961
அருட்திரு. பிரான்சிஸ் தேவசகாயம் 1961-1962
அருட்திரு. பீட்டர் 1962-1963
அருட்திரு. ஜேசு அருளப்பன் 1963-1964
அருட்திரு. கருணாகரன் 1964-1965
அருட்திரு. பீற்றர் ராஜா 1965
அருட்திரு. செங்கோல்மணி 1966
அருட்திரு. மரியதாசன் 1966-1967
அருட்திரு. லாரன்ஸ் 1966-1967
அருட்திரு. செர்வாசியுஸ் 1968-1969
அருட்திரு. வெனான்சியுஸ் 1969-1970
அருட்திரு. தியோபிலஸ் 1970-1971
அருட்திரு. ஆஸ்வால்ட் 1971-1972
அருட்திரு. ஆஸ்வால்ட் 1972-1973
அருட்திரு. அமலதாஸ் 1973-1974
அருட்திரு. ஜெபமாலை 1974-1975
அருட்திரு. சேவியர் ஜார்ஜ் 1975-1976
அருட்திரு. சூசைமாணிக்கம் 1976-1977
அருட்திரு. விக்டர் 1977-1978
அருட்திரு. செட்ரிக் பிரீஸ் 1978-1979
அருட்திரு. ஸ்தனிஸ்லாஸ் 1979-1980
அருட்திரு. அமலதாஸ் 1980-1981
அருட்திரு. ஜோசப் ரவிபாலன் 1981-1982
அருட்திரு. மரியதாஸ் 1982-1983
அருட்திரு. ஜோசப் லடிஸ்லாஸ் 1983-1984
அருட்திரு. நவஜோதி 1984-1985
அருட்திரு. பர்னபாஸ் 1985-1986
அருட்திரு. சுரேஷ் 1986-1987
அருட்திரு. அந்தோணி ஜெககதீஷ் 1987-1988
அருட்திரு. தேவ நவமணி 1988-1989
அருட்திரு. இசிதோர் 1989-1990
அருட்திரு. செல்வ ஜார்ஜ் 1990-1991
அருட்திரு. நெல்சன் 1991-1992
அருட்திரு. வினோபா 1992-1993
அருட்திரு. பீட்டர் 1993-1994
அருட்திரு. ரெமிஜியூஸ் 1994-1995
அருட்திரு. பிரோமில்டன் லோபோ 1995-1996
அருட்திரு. குணசீலன் 1996-1997
அருட்திரு. டோமினிக் அருள் வளன் 1997-1998
அருட்திரு. புருனோ 1998-1999
அருட்திரு. மரிய வளன் 1999-2000
அருட்திரு. மைக்கிள் மகிழன் 2000-2001
அருட்திரு. ரவீந்திரன் 2001-2002
அருட்திரு. ஜாண்சன்ராஜ் 2002-2003
அருட்திரு. இராயப்பன் 2003-2004
அருட்திரு. இராஜா ரொட்ரிக்கோ 2004-2005
அருட்திரு. கிஷோக் 2005-2006
அருட்திரு. ரெத்தினராஜ் 2006-2007
அருட்திரு. ஜேசுதாஸ் 2007-2008
அருட்திரு. பிரதீப் 2008-2009
அருட்திரு. மணி 2009-2010
அருட்திரு. கிளைட்டன் 2010-2011
அருட்திரு. செல்வரெத்தினம் 2011-2012
அருட்திரு. ராபின் ஸ்டான்லி 2012-2013
அருட்திரு. சகாயராஜ் 2013-2014
அருட்திரு. அற்புதசேவியர் 2014-2015
அருட்திரு. அல்பின் லியோன் 2015-2016
அருட்திரு. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா 2016-2017
அருட்திரு. சூசைமணி 2017-2018
அருட்திரு. சேவியர் கிங்ஸ்டன் 2018-2019
அருட்திரு. வினித் ராஜா 2019-2020
அருட்திரு. மார்ட்டின் ராஜா 2020-2021
அருட்திரு. ராஜேஷ் 2021-2022
அருட்திரு. எழில் நிலவன் 2022-2023
அருட்திரு. சவரிராஜ் 2023-2024
அருட்திரு. G. பிரதாப் 2024-
திருவிழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்திலுள்ள திருப்பயணிகள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
புனித தேவசகாயம் அவர்கள் உபயோகித்த திருப்பண்டங்கள் (தலைச்சீரா, ஓலைச்சுவடிகள்] திருப்பயணிகள் தரிசிப்பதற்காக காட்சி படுத்தப்பட்டுள்ளது.
மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இருந்து திருப்பயணிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாதத்தின் முதல் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு மலையாளத்தில் பாவ மன்னிப்பு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து திருப்பலி நடைபெறுகிறது.
தவக்கால திருப்பயணமாக தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத்திலிருந்து திருப்பயணிகள் வந்து தங்கிச் செல்கிறார்கள்.
திருப்பயணிகள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளது.
புதுமைகள் நிறைந்த பரிசுத்த திருக்குடும்ப தேவாலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..
பங்கின் வரலாறு: ஆலய 150-வது ஆண்டுவிழா மலர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: வடவை கத்தோலிக்க இறைமக்கள். கட்டளை S. பென்கர், மற்றும் ஆரிஸ் ராஜா ஆகியோர்.