கோவை மறைமாவட்டம்

கோவை மறைமாவட்டம் (இலத்தீன்: Coimbaturen(sis)) என்பது கோயம்புத்தூர் புனித மிக்கேல் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் - 2,58,600 (2004)

கதீட்ரல் புனித மிக்கேல் கதீட்ரல்

வரலாறு

1850: மதுரா மறைமாவட்டத்தில் இருந்து கோவை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டது.

செப்டம்பர் 1, 1886: கோவை மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

தலைமை ஆயர்கள்

கோவை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)


தாமஸ் அக்குயினாஸ் லெப்போன்ஸ் (ஜூலை 10, 2002 - இதுவரை)

அம்புரோஸ் மதலைமுத்து (டிசம்பர் 6, 1979 - ஜூலை 10, 2002)

மனுவேல் விசுவாசம் (பிப்ரவரி 3, 1972 - ஜூன் 2, 1979)

பிரான்சிஸ் சேவியர் முத்தப்பா (டிசம்பர் 25, 1949 - நவம்பர் 23, 1971)

உபகாரசாமி பெர்னதெத் (ஏப்ரல் 9, 1940 - பிப்ரவரி 5, 1949)

மரி-லூயிஸ்-ஜோசப்-கான்ஸ்டன்டின் டோர்னியர், M.E.P. (ஜனவரி 12, 1932 - ஜனவரி 1938)

அகஸ்டின்-அன்டோனி ராய், M.E.P. (பிப்ரவரி 12, 1904 - டிசம்பர் 4, 1930)

ஜாக்குவஸ்-டெனிஸ் பெரமேல், M.E.P. (மே 23, 1903 - ஆகஸ்ட் 17, 1903)

எட்டீன்-அகஸ்டி-ஜோசப்-லூயிஸ் பர்டோ, M.E.P. (ஏப்ரல் 30, 1874 - பிப்ரவரி 7, 1903)

கோவையின் அப்போஸ்தலிக்க பிரதிநிதிகள் (இலத்தீன் ரீதி)

க்ளாவ்ட்-மரி டெப்போமியர், M.E.P. (பிப்ரவரி 17, 1865 - டிசம்பர் 8, 1873)

ஆயர் மெல்க்கியோர் மரி ஜோசப் டி மரியோன் ப்ரசில்லாக், M.E.P. (மார்ச் 16, 1845 - மார்ச் 18, 1855)

https://www.coimbatorediocese.com/

நன்றி: விக்கிபீடியா