சிவகங்கை மறைமாவட்டம்

சிவகங்கை மறைமாவட்டம் என்பது சிவகங்கை புனித மரியன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

மக்கள் தொகை கத்தோலிக்கர் - 1,77,868 (2004)

கதீட்ரல் அலங்கார அன்னை கதீட்ரல்

வரலாறு


17ஆம் நூற்றாண்டில் மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித அருளானந்தர், இயேசு சபை மறைபரப்பு பணியாளராக சிவகங்கை பகுதிக்கு வந்து ஆலயங்களை நிறுவினார். அவர் 1693 பிப்ரவரி 4ந்தேதி, ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார்.


ஜூலை 25, 1987: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டின்படி, 62 பங்குதளங்களும், 734 மறைபரப்பு பணி மையங்களும், மேலும் பல கல்வி நிறுவனங்களும் உள்ளன. 107 மறைமாவட்ட குருக்களும், 19 துறவற சபை குருக்களும், 350க்கும் மேற்பட்ட துறவறத்தாரும் உள்ளனர்.

தலைமை ஆயர்கள்

சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் ஜெபமாலை சூசை மாணிக்கம் (2005 - இதுவரை)
ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் (1987 - 2005

மறைமாவட்ட அருள் பணிக்குழுக்கள்

விவிலியம்
திருவழிபாடு
மறைக்கல்வி
நற்செய்தி அறிவிப்பு
அன்பியம்
அழைத்தல்
சமூக நீதி
கிறித்தவ ஒன்றிப்பு
பல்சமய உரையாடல்
குடும்பம்
கல்வி
சமூகத் தொடர்பு
நலவாழ்வு
சமூகச் சேவை
சிறார்
இளைஞர்
பெண்கள்
தொழிலாளர்
தலித்
பொதுநிலையினர்
துறவியர்

பக்தசபைகளும் இயக்கங்களும

பாலர் சபை
சிறுவழி இயக்கம்
இளம் கிறித்தவ மாணவர் இயக்கம்
இளைஞர் இயக்கம்
பெண்கள் இயக்கம்
குடும்பநல இயக்கம்இளம் கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம்
கத்தோலிக்க சங்கம்
கிறித்தவ வாழ்வு சமூகம்
மரியாயின் சேனை
வின்சென்ட் தே பவுல் சங்கம்

நன்றி: விக்கிபீடியா