583 புனித சவேரியார் ஆலயம், கோவிலாண்டனூர்


புனித சவேரியார் ஆலயம் 

இடம் : கோவிலாண்டனூர்

மாவட்டம் : தென்காசி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : சங்கரன்கோவில்

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சேர்ந்தமரம்

பங்குத்தந்தை : அருள்பணி. A. இம்மானுவேல் ஜெகன் ராஜா 

குடும்பங்கள் : 205

அன்பியங்கள் : 6

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு :

காலை 05:00 - காலை ஜெபம்

காலை 10:00 - திருப்பலி - தமிழ்

மாலை 07:00 - செபவழிபாடு - தமிழ்

திங்கள் :

காலை 05:00 - காலை ஜெபம் 

மாலை 07:00 - செபவழிபாடு 

செவ்வாய்:

காலை 05:00 - காலை ஜெபம்- 

மாலை 07:00 - செபவழிபாடு - தமிழ்

புதன் :

காலை 05:00 - காலை ஜெபம் 

மாலை 07:00 - செபவழிபாடு - தமிழ்

வியாழன் :

காலை 05:00 - காலை ஜெபம் 

மாலை 07:00 - திருப்பலி தமிழ்

வெள்ளி:

காலை 05:00 - காலை ஜெபம்

மாலை 07:00 - செபவழிபாடு - தமிழ்

சனி:

காலை 05:00 - காலை ஜெபம்

மாலை 07:00 - செபவழிபாடு - தமிழ்

தூய சவேரியார் திருவிழா நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்பணி. லூ. இன்னாசிமுத்து, OCD

2. அருள்சகோதரி. விர்ஜின் ரத்தினம் பீகார், ஜார்க்கண்ட், அமல அன்னை சபை

வழித்தடம்:

சுரண்டை to கடையநல்லூர் - கோவிலாண்டனூர்.

சங்கரன்கோவில் to தென்காசிவழி. சேர்ந்தமரம்.(கோவிலாண்டனூர்)

Location map : St.Xavier's Church

Kovilandanoor, Tamil Nadu 627856

https://g.co/kgs/dUVjbB 

வரலாறு :

பழைமை வாய்ந்த சேர்ந்தமரம் பங்கின் கிளைப்பங்கான கோலிலாண்டனூர் புனித சவேரியார் ஆலய வரலாற்றைக் காண்போம். 

1912 ஆம் ஆண்டில் கோவிலாண்டனூரில் வாழும் கத்தோலிக்க இறைமக்களுக்காக சிறு குடிசை ஆலயம் கட்டப்பட்டது. 

பின்னர் 1936 ஆம் ஆண்டில் மக்களின் முயற்சியால் ஆலயம் கட்டப்பட்டது. 

அருள்பணி. I. லூர்துராஜ் அவர்களின் பணிக்காலத்தில், 1988 ஆம் ஆண்டு  புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 16.06.1990 அன்று மேதகு ஆயர் S. இருதய ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.  

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடந்து வரும் ஜெபவழிபாடுகள் இம்மக்களின் இறைவிசுவாசத்தை ஆழப்படுத்துகின்றது. 

அழகிய ஆரோக்கிய மாதா கெபியானது அருள்பணி. ச. அந்தோணி வியாகப்பன்  பணிக்காலத்தில் 16.09.2009 அன்று அருள்பணி. ச. ஜோசப்ராஜ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 09.09.2012 அன்று மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது . 

எஸ்தர் அன்பியம்,

கபிரேயல் தூதர் அன்பியம்,

இம்மானுவேல் அன்பியம்,

சவேரியார் அன்பியம்,

விண்ணரசி அன்பியம், 

கிளாரா அன்பியம்

ஆகிய 6 அன்பியங்கள் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.