30 கிறிஸ்து அரசர் ஆலயம், இருதயபுரம்

  

கிறிஸ்து அரசர் ஆலயம்.

இடம் : இருதயபுரம்,

குளப்புறம் அஞ்சல் 

மாவட்டம்: கன்னியாகுமரி 

மறை மாவட்டம்: குழித்துறை 

மறைவட்டம்: திரித்துவபுரம்

நிலை : பங்குத்தளம் 

கிளை: தூய மரியன்னை ஆலயம்,  மண்ணான்விளை

பங்குப்பணியாளர் அருள்பணி. லியோ அலெக்ஸ்

குடும்பங்கள் : 284

அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 09:15 மணிக்கு.

வாரநாட்களில் திருப்பலி காலை 07:00 மணி

திருவிழா : நவம்பர் மாதம் கிறிஸ்து அரசர் விழாவை ஒட்டிய ஐந்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஷெல்லி ரோஸ்

2. அருட்பணி. ஏசுராஜ்

வழித்தடம்: இருதயபுரமானது, களியக்காவிளை -கொல்லங்கோடு சாலையில் செறுவாரக்கோணம் பகுதியில் அமைந்துள்ளது.

இருதயபுரம் ஆலய வரலாறு :

கி.பி 1945 ஆம் ஆண்டு சிலுவைபுரம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த இருதயபுரம் ஊரில், பங்குத்தந்தை அருட்பணி. போர்ஜியோ தலைமையில் சுமார் 25 குடும்பங்களைக் கொண்டு ஒரு ஓலைக் குடிசையில் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டு ஓட்டுக் கட்டிடம் அமைக்கப் பட்டு, கிறிஸ்து அரசருக்கு அர்ப்பணிக்கப் பட்டு, ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. மற்ற நாட்களில் ஆரம்பப் பள்ளியாகவும் இயங்கி வந்தது. 

தொடர்ந்து அருட்பணியாளர்கள் ஜோசப், அந்தோணி முத்து, தனிஸ்லாஸ், மெல்லார்டு, ஏசுதாஸ், லியோன் அ. தர்மராஜ் ஆண்டகை ஆகியோரின் இறைப் பணியால் மேலும் 60 குடும்பங்கள் கிறிஸ்துவில் இணைந்தனர். 

ஆரம்பப் பள்ளியாக செயல்பட்டு வந்த பள்ளிக்கூடம், 1956 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. 

1980 ஆம் ஆண்டு முதல் களியக்காவிளை பங்கின் கிளைப் பங்காக இருதயபுரம் மாற்றப்பட்டது. 

அருட்பணி. வின்சென்ட் மற்றும் அருட்பணி. ஜோண்ஸ் ஆகியோரின் முயற்சியால் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 

1983 ஆம் ஆண்டு அருட்பணி. ஜூலியஸ் மற்றும் அருட்பணி. ஆன்றனி அல்காந்தர் ஆகியோரின் முயற்சியால், உயர்நிலைப் பள்ளிக்கு இரண்டு அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டது. 

அருட்பணி. ஏசுதாஸ் தோமஸ், அருட்பணி. அம்புரோஸ் ஆகியோரின் முயற்சியால் புதிய ஆலயம் கட்டப்பட்டு 12.03.1975 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

அருட்பணி. பெனடிக்ட் M. D. ஆனலின், அருட்பணி. பெர்பெச்சுவல் ஆகியோரின் முயற்சியில் ஆன்மீக வளர்ச்சியுடன், பல வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. 

மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களின் பேருதவியால் 03.06.2002 அன்று இருதயபுரமானது தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. சுஜன் குமார் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்.

அருட்பணி. R. பால் ரிச்சர்ட் ஜோசப் அவர்களின் பணிக்காலத்தில் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு, 22.11.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பாலர் சபை

2. சிறுவழி இயக்கம்

3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

4. இளைஞர் இயக்கம்

5. கிராம முன்னேற்ற சங்கம்

6. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

7. கோல்பிங் இயக்கம்

8. வழிபாட்டுக் குழு

9. பாடகற்குழு

10. பீடச்சிறார்

11. மறைக்கல்வி

12. பங்கு அருட்பணி பேரவை

பங்கின் குருசடி:

புனித விண்ணேற்பு அன்னை குருசடி

பங்கின் பள்ளிக்கூடம்:

கிறிஸ்து அரசர் உயர்நிலைப் பள்ளி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. சுஜன் குமார்

2. அருட்பணி. பால் ரிச்சர்ட் ஜோசப்

3. அருட்பணி. ஐசக் ராஜ்

4. அருட்பணி. ஜெயபாலன்

5. அருட்பணி. மேரி ஜாண்

6. அருட்பணி. லியோ அலெக்ஸ்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குப் பணியாளர் அருள்பணி. லியோ அலெக்ஸ் அவர்கள்.