116 தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு


தூய சகாய மாதா ஆலயம்

இடம் : ஈஞ்சக்கோடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி சேவியர் ராஜ்.

நிலை : பங்குதளம்
கிளைகள் :
1. தூய ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை.
2. தூய அந்தோணியார் ஆலயம், பெருஞ்சாணி.

குடும்பங்கள் : 210
அன்பியங்கள்: 10

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

திருவிழா : மே மாதத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

குமரி மாவட்டத்தில் உள்ள அழிகிய கிராமங்களில் ஒன்றான ஈஞ்சக்கோடு பகுதியில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என திரு. சவேரியார் அடிமை என்பவர், குலசேகரம் பங்குத்தந்தை யை அணுகி வலியுறுத்தி வந்தார்.

குலசேகரம் பங்குத்தந்தை அருட்பணி. இலாசர் அவர்களை அடிக்கடி சந்தித்து ஆலயம் கட்டுவதற்கு ஆலோசித்து வந்தார். அந்த காலகட்டத்தில் ஈஞ்சக்கோடு பகுதியில் 5 கத்தோலிக்க குடும்பங்களே இருந்தன.

1965 ஆம் ஆண்டில் 10 குடும்பங்கள் திருமுழுக்குப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து தேன்பாறையடி செல்லும் வழியில் சிறு ஓலைக்குடில் ஆலயம் கட்டப்பட்டு, மாதத்திற்கு ஒரு திருப்பலியும், மறைக்கல்வி வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன.

1966 ல் அருட்பணி. சார்லஸ் பொரோமியோ அவர்களால் ஆலயம் கட்ட நிலம் வாங்கப் பட்டது.

02.06.1968 அன்று ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, குலசேகரம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

1972 ல் அருட்பணி. C. M. வென்சஸ்லாஸ் அவர்களால் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் இறைப் பணிக்காக அழைக்கப் பட்டனர். இவர்களது சிறந்த இறைப்பணியால் ஈஞ்சக்கோடு சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்தது.

1981 ல் அருட்பணி. ஆண்ட்ரூ செல்வராஜ் அவர்களால் பிறரன்பு சபை அருட்சகோதரிகள் வரவழைக்கப்பட்டு இறைப்பணி தொடரந்பட்டது.

புதிய ஆலயமானது அருட்பணி. தாமஸ் SAC அவர்களால் துவக்கப்பட்டு, அருட்பணி. சூசையன் அவர்களால் நிறைவு செய்யப்பட்டு 09.11.2002 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.