304 புனித செபஸ்தியார் ஆலயம், சடையம்பாளையம்


புனித செபஸ்தியார் ஆலயம்.


இடம் : சடையம்பாளையம்

மாவட்டம் : சேலம்
மறை மாவட்டம் : சேலம்

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்பணி இருதய செல்வம்

குடும்பங்கள் : 350
அன்பியங்கள் : 14

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

வாரநாட்களில் திங்கள், புதன், வெள்ளி திருப்பலி : காலை 06.30 மணிக்கு

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

சிற்றாலயங்கள்:
1.புனித வனத்து சின்னப்பர் ஆலயம்
2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

திருவிழா : ஜனவரி மாதம் 20-ம் தேதி

வழித்தடம் :
சேலம் - பவானி செல்லும் வழியில் குமராபாளையம். குமாரபாளையத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் சடையம்பாளையம் உள்ளது. சடையம்பாளையம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் சேர்ந்தது.

இவ்வாலயமானது சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கியது. அதாவது சாலையின் ஒருபுறம் நாமக்கல் மாவட்டமும், மறுபுறம் சேலம் மாவட்டமும் எல்லைகளாகும். இரண்டு மாவட்டங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

ஆகவே இரண்டு மாவட்ட மக்களை பங்கு மக்களாக கொண்டிருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.

தற்போதைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 14-11-2018 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

வரலாறு :

பொன்னிநதி எனப்படும் காவிரியாற்றின் வாய்க்கால் கரையில் அமைந்துள்ளது சடையம்பாளையம். புனித செபஸ்தியாரைப் பாதுகாவலராகக் கொண்டு எடப்பாடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

1970 ஆம் ஆண்டில் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. 

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் மக்கள் தொற்று வியாதியில் துன்புற்ற போது, புனித செபஸ்தியார் வழியாக இறைவனிடம் ஜெபிக்க, அற்புதமாக அனைவரின் நோய் நீங்கி நலம் பெற்றனர். ஆகவே பங்கின் பாதுகாவலராக புனித செபஸ்தியாரை தேர்ந்து கொண்டனர். 

1975 இல் பங்குத்தந்தை அருட்பணி. மத்தேயு கடவில் பணிக்காலத்தில், அருட்பணி. மத்தேயு தெக்கடம் இங்கு தங்கி சங்ககிரி, சிமென்ட் ஆலை மக்களுக்கும் இறைப் பணியாற்றினார். 

அருட்பணி. M. S. ஜோசப் (1979-1984) பணிக்காலத்தில் முதல் சனிக்கிழமை பக்தி முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. 

28.01.2003 அன்று பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 24.05.2003 அன்று மணிக்கூண்டு கட்டப்பட்டது. 

இவ்வாலயமானது சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கியது. அதாவது சாலையின் ஒருபுறம் நாமக்கல் மாவட்டமும், மறுபுறம் சேலம் மாவட்டமும் எல்லைகளாகும். இரண்டு மாவட்டங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.  இரண்டு மாவட்ட மக்களை பங்கு மக்களாக கொண்டிருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு. 

தற்போதைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 14-11-2018 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்தந்தை. சாலமன் 
2. அருட்தந்தை. பிரசன்னா 

மற்றும் 10 -க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளையும் இறைப்பணிக்காக தந்துள்ளது சடையம்பாளையம் இறைசமூகம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. M. அருள்சாமி 
2. அருட்பணி. மத்தேயு கடவில் 
3. அருட்பணி. M. S. ஜோசப் (1979-1984)
4. அருட்பணி. M. செல்வம் (1984)
5. அருட்பணி. A. L. இருதயம் (1984-1987)
6. அருட்பணி. K. S. பயஸ் (1987-1990)
7. அருட்பணி. எட்வர்ட் ராஜன் (1990-1993)
8. அருட்பணி. S. சவரிமுத்து (1993-1996)
9. அருட்பணி. E. கிரகோரிராஜன் (1996-2000)
10. அருட்பணி. A. சார்லஸ் (2000-2006)
11. அருட்பணி. லூர்துசாமி (2006-2011)
12. அருட்பணி. ஆனந்தராஜ் (2011-2013)
13. அருட்பணி. குருசடி சகாயராஜ் (2013-2018)

14. அருட்பணி. இருதய செல்வம் (2018 முதல் தற்போது வரை...)