தூய லூர்து அன்னை ஆலயம்
இடம் : ஆலஞ்சோலை.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை (2018) : அருட்பணி V Vinso Antony.
நிலை : பங்குதளம்
கிளைகள்:
1. தூய தோமையார் ஆலயம், சிற்றார்
2. தூய சலேசியார் ஆலயம், சானல்கரை (சிற்றார் Dam 2)
குடும்பங்கள் : 190
அன்பியங்கள் : 11
ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.
திருவிழா : பெப்ரவரி 11ம் தேதியை உள்ளடக்கிய ஐந்து நாட்கள்.
ஆலஞ்சோலை வரலாறு :
இயற்கை எழில் நிறைந்த, மலைகள் சூழ்ந்த, சிற்றார் 1, சிற்றார்2 அணைப்பகுதியில் நீர்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ளது ஆலஞ்சோலை.
இங்குள்ள மக்கள் நடந்தே, 1961 ஆம் ஆண்டு வரை தொலைவில் உள்ள குலசேகரம் மற்றும் அருகில் உள்ள ஆலயங்களுக்கும் வழிபாட்டிற்கு சென்று வந்தனர்.
இம் மக்களின் இறை விசுவாசத்தை உணர்ந்த குலசேகரம் பங்குத்தந்தை அருட்பணி. லாசர் அவர்களின் முயற்சியால் தூய லூர்து அன்னை ஆலயம் கட்டப்பட்டது.
1964 ஆம் ஆண்டு முதல் கடையால் பங்கின் கிளைப் பங்காக ஆனது.
அருட்பணி. மத்தியாஸ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் கட்டப்பட்டு 11.02.1969 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
தற்போதைய புதிய ஆலயம் அருட்பணி. ஹென்றி ஜோசப் பணிக்காலத்தில் கட்டப்பட்டது.
14.05.2008 ஆம் ஆண்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கிய ஷெல்லி றோஸ் அவர்கள் சிறப்பாக பணியாற்றி மக்களை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தினார்கள்.
தொடர்ந்து அருட்பணி. மரிய அற்புதம் அவர்களும், தொடர்ந்து அருட்பணி. வின்சோ ஆன்றனி அவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வாலய திருவிழாவின் போது அருகில் உள்ள இந்து மற்றும் முஸ்லிம் மக்களும் இணைந்து பங்கேற்பது, சமய ஒற்றுமைக்கு சான்று ஆகும்.
மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணி. மரிய செல்வன்.
அருட்சகோதரி. பபிலா மேரி
அருட்சகோதரி. ஜெயா டெல்பின்
அருட்சகோதரர். டிபின்.