அமலமரி தூதுவர்கள் சபை (MMI)

   

அமலமரி தூதுவர்கள் சபை  

ஆங்கிலத்தில்: Order of Mother of God

சுருக்கமாக: OMD

சபையின் நிறுவனர்: புனித ஜான் லியோனார்தி (1541-1609)

சபை நிறுவப்பட்ட ஆண்டு: 1574

நிறுவப்பட்ட இடம்: லூக்கா, இத்தாலி 

சபையின் பெயர்க்காரணம்:

முதலில் கன்னித்தாயின் குருக்கள் என்றே OMD குருக்கள் அழைக்கப்பட்டனர். காரணம் லூத்தர் போன்றவர்களின் தாக்கத்தால், மக்கள் மத்தியில் நற்கருணை வழிபாடு மற்றும் அன்னை மரியா வணக்கம் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் மனநிலை மளுங்கடிக்கப்பட்ட நேரத்தில், இறையன்னை சபையை நிறுவி, நற்கருணை வழிபாடு மற்றும் அன்னை மரியாள் பக்தியை, மறைக்கல்வி போதித்து நிலைநிறுத்த, திருச்சபையின் தூண்களாய் நின்று பணி செய்தவர்கள் இறையன்னை சபை குருக்களே ஆவர். ஆகவே புனித லியோனார்தியார் அன்னையின் பெயரை பறைசாற்ற இறையன்னை சபை என பெயரிட்டார்.

சபையின் பாதுகாவலர்:

தூய பரலோக அன்னை

சபையின் விழா நாள்: ஜனவரி 1 ஆம் தேதி (இறைவனின் தாய் மரியாள்)

சபையின் தலைமையகம்: இத்தாலி-உரோம்

Generalate address:

Casa Genaralizia, Piazza Campitelli 9, 00186, Roma, Italia.

நோக்கம்:

1. நற்கருணை வழிபாட்டை வளர்ப்பது

2. மரியன்னை பக்தியை ஊக்கப்படுத்துவது

3. சிறுவர்களுக்கும், இளையோர்களுக்கும், முதியோருக்கும் மறைக்கல்வி போதிப்பது

4. காலத்தின் அறிகுறிகளை அறிந்து பணியாற்றுவது

அடையாளங்கள்:

வெள்ளை நிற அங்கி காலரின் மேல் பகுதி கருப்பு. அல்லது வெள்ளை நிற அங்கி, கருப்பு இடை கச்சை, காலரின் மேல் பகுதி கருப்பு.

சபையில் இருந்து உருவான புனிதர்: 

புனித ஜான் லியோனார்தி. 2009 இல் திருத்தந்தை 16 ஆம் ஆசீர்வாதப்பர் புனித லியோனார்தியாரை மருந்தாளுனர்களின் பாதுகாவலராக அறிவித்தார்.

புனித லியோனார்தியார் பெருவிழா: அக்டோபர் 9 ஆம் தேதி.

OMD சபையின் (Venerable) இறையடியார்கள்: 

1. செசார் பிரஞ்சியோத்தி

2. ஜோவானி பத்திஸ்தா சியோனி

சபையிலிருந்து உருவான ஆயர்கள்:

1. Most Rev. Antonio Maria Baccigalupi 

2. Most Rev. Gian Domenico Mansi

3. Most Rev. Giacchino  Vassetta

4. Most Rev. Agostino Oliveri

5. Most Rev. Carlo Baldini

6. Most. Rev. Oscar Hernan Blanco Martinez

சபையினரின் பணிகள்:

இறைப்பணி, நற்செய்தி அறிவிக்கும் பணி, பங்குப்பணி, கல்விப்பணி, இளையோர் பணி, மருத்துவப்பணி,

ஆற்றுப்படுத்தும் பணி, சமூகப்பணி

சபையினர் பணிபுரியும் நாடுகள்: இத்தாலி, சிலி, நைஜீரியா, கமரோன், கொலம்பியா, இந்தோனேசியா, இந்தியா.

சபை வரலாறு:

புனித ஜான் லியோனார்தி (ஜோவான்னி லியோனார்தி):

1541 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் தியேசியோ (லூக்கா) நகரில் பிறந்தார்.

1558 ஆம் ஆண்டு லூக்காவில் மருந்தாளுநராக பணியேற்றார்.

1568 ஆம் ஆண்டில் மருந்தாளுநர் பணியைத் துறந்தார்.

1571 ஆம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1572 ஆம் ஆண்டு திருக்காட்சி பெருவிழா நாளில் தமது முதல் திருப்பலியை நிறைவேற்றினார்.

1574 ஆம் ஆண்டு மே மாதம் 03-ம் தேதியில் நாள்முழுவதும் புனித ரோஸாவின் அன்னையின் ஆலயத்தில் இருந்தார். 1574 செப்டம்பர் முதல் நாளில் புனித மரியன்னையின் துறவற சபையை தோற்றுவித்தார்.

1579 ஆம் ஆண்டு லூக்காவில் (இத்தாலி) தூதுவர்கள் மடத்தை நிறுவினார்.

1580 ஆம் ஆண்டு தமது சபையின் துறவிகளோடு, புனித ரோஸாவின் மரியன்னை ஆலயத்திலிருந்து, புனித சொர்தேரோலாந்தினியின் மரியன்னை ஆலயத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

1583 ஆம் ஆண்டு லூக்கா மறைமாவட்ட ஆயர் மேதகு அலெக்ஸாண்டிரியோ டுச்சியோனி அவர்களால், லியோனோர்தியின் சபை மறைமாவட்ட சபையாக உயர்த்தப்பட்டது.

1587 இரண்டாம் முறையாக லியோனோர்தி உரோம் நகர் சென்றார். (1584 இல் முதல் முறையாக உரோம் சென்றார்). முதலாவது லூக்கா பேரவைக்கு சென்றார். பின்னர் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் அவர்களை சந்தித்தார். இதன் பின்னர் சொந்த ஊருக்கு செல்லவேயில்லை.

1592 ஆம் ஆண்டு லூக்காவிற்கு திரும்பச் சென்று இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தார். சியன்னாவில் ஒருசில நாட்கள் தங்கி பெசியா துறவற சபையைச் சந்தித்தார். உரோம் நகருக்கு திரும்பிச் சென்று திரு ஆதீனத்தின் கண்காணிப்பாளராக நேப்பில்ஸின் அன்னையின் நிறுவினத்தில் பொறுப்பேற்றார்.

1596 ஆம் ஆண்டு அவெலின்னோயிற்கு அருகிலுள்ள மோன்தேவெர்ஜின் துறவியருடைய மறுமலர்ச்சியாளராக பொறுப்பேற்றார்.

1601 ஆம் ஆண்டு வல்லம்புரோஸா மற்றும் மரியாளின் ஊழியர் ஆகிய துறவற சபைகளுக்கு ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டார்.

1604 ஆம் ஆண்டு திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் அவர்களால், லியோனோர்தியின் இறை அன்னை சபை அங்கீகாரம் பெற்றது.

1607 ஆம் ஆண்டு பேரருட்திரு. விவெல்ஸ் அவர்களோடு இணைந்து 'விசுவாசம் பரப்புதல்' என்னும் இயக்கத்தை உருவாக்கினார். 

1609 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 மற்றும் 9-ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் இறைவனில் இணைந்தார்.

1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் அவர்கள், ஜான் லியோனார்தியை புனிதராக அறிக்கையிட்டார். 

புனித ஜான் லியோனார்தியின் நினைவை அக்டோபர் மாதம் 09-ம் தேதி கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

புனித ஜான் லியோனார்தியின் சீர்திருத்தப் பணிகள்:

குருவாக பணிப்புரிந்த அருட்தந்தை ஜான் லியோனார்தி திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, லூக்கா நகரில் தனது சீர்திருத்தப் பணியை மேற்கொண்டார். அதன் பிறகு மோந்தே வெர்ஜினே என்ற இடத்தில் உள்ள துறவற சபையையும் சீர்திருத்தம் செய்தார். அந்த சபையானது புனித ஜீலியல் மோ டா வார்செலி என்பவரால் 1126 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சபையானது பெனடிக்டைன் சபையின் ஒழுங்கு முறையான ‘செபமும், தவமும்’ என்பதை மிக மிக முக்கியமாக கருதி பின்பற்றி வந்தது. காலப்போக்கில் சபையின் ஒழுங்கு முறையானது கடைப்பிடிக்கப்படாமல், அவரவர் விருப்பம் போல், சுகப்போக, ஆடம்பர வாழ்க்கையையும் வாழத் தொடங்கினர். இதை அறிந்த அன்றைய திருத்தந்தை எட்டாம் கிளமன்ட் என்பவர், சபையை சீர்திருத்தம் செய்வதற்காக திறமைமிக்க ஆறு நபர்களை அனுப்பினார். அவர்களால் சீர்திருத்தம் செய்ய இயலாத தருணத்தில், பிலிப் நெரி என்னும் அருட்தந்தையை அனுப்ப திருத்தந்தை கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் உடல் நலமின்றி இருந்ததால், ஜான் லியோனார்தியை அனுப்பலாம் என திருத்தந்தையைக் கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, ஜான் லியோனார்தி அங்கு சென்று சீர்திருத்தம் செய்யத் தொடங்கினார். ஜான் லியோனார்தியின் சீர்திருத்தப் பணியானது வெற்றிகரமாக முடிந்தது. 

அதன் பிறகு, ஜான் லியோனார்தி ‘அவெர்ஸா’ எனும் இடத்திலும் தனது சீர்திருத்தப் பணியை செய்தார். அங்கு ஆயர் நியமிக்கும் வரை தனது சீர்திருத்தப் பணியியை மிகவும் திறம்படச் செய்தார். அதைத் தொடர்ந்து, ‘மடோனா தெல் ஆர்க்கோ’ என்னும் அன்னை மரியின் ஆலயத்திலும் தனது சீர்திருத்தப் பணியினை 1592 முதல் 1594 வரை செய்தார். அன்னையின் பெயரை தாங்கிய அந்த ஆலயத்தில் காணிக்கையாக வரும் பொருட்களையும், செல்வத்தையும் அப்போதிருந்த அரசரும், ஆயரும் மட்டுமே அனுபவித்து, ஆடம்பர வாழ்வை வாழ்ந்தனர். ஆலய வளர்ச்சிக்காகவும், மக்களின் ஈடேற்றத்திற்காகவும் பயன்படுத்தாமல் இருந்ததைக் கண்ட திருத்தந்தை, ஜான் லியோனார்தியை சீர்ப்படுத்துவதற்காக அனுப்பினார். ஜான் லியோனார்தியின் கடின முயற்சியால் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அன்னை மரியின் பெயரில் ஆலயமும் தோற்றுவித்தார். ஆலயத்தில் பல விதமான ஆன்மீக வழிபாடுகளை உட்புகுத்தி, அன்னை மரியின் பக்தியையும் வளர்த்தார். இவ்வாறாக, பல இடங்களிலும், துறவற சபைகளிலும் திருத்தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சீர்திருத்தப் பணியினை மிகவும் திறம்படச் செய்தார். ஜான் லியோனார்தி சீர்திருத்தத்தில் சிறந்தவர் என அனைவராலும் போற்றக் கூடியவராக திகழ்ந்தார். 

சீர்திருத்தப் பணியினை நன்கு ஆற்றிய ஜான் லியோனார்தி, லூத்தரன் பிரிவினை சபையினருக்கு எதிராகவும் தன் பணியினைச் செய்தார். லூத்தரன் பிரிவினை சபையைச் சார்ந்தவர்கள் ‘நற்கருணையில் இயேசுவின் உண்மையான பிரசன்னத்தையும், அன்னை மரியாளின் பக்தியையும், திருத்தந்தைக்கு கீழ்ப்படிதலையும் மறுதலித்தனர்'. அவர்களுக்கு எதிராக, ஜான் லியோனார்தி தான் தோற்றுவித்த இறையன்னை சபையின் தனி வரமாக ‘நற்கருணை பக்தி, அன்னை மரியாள் பக்தி, சிறுவர்க்கு மறைக்கல்வி’ போன்றவற்றை தோற்றுவித்து, அவற்றை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தினார். மறைக்கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்கு முதன் முதலாக ‘கிறிஸ்தவக் கோட்பாடுகள்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். திருச்சபையில் உள்ள ஒவ்வொருவரும் திருத்தந்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். ஜான் லியோனார்தியின் வழியில் வந்த தன் சகோதரர்களுக்கு ஒழுங்கு அமைப்பாக ‘கீழ்ப்படிதல்’ என்பதை மிகவும் வலியுறுத்தி வாழப் பணித்தார். தான் தோற்றுவித்த சபைக்கும் ஒழுங்கு நூலாக ‘கீழ்ப்படிதல்’ என்பதை வலியுறுத்தினார். 

நெல்லிக்கனி முதலில் கசக்கும், பின்னரே இனிக்கும். அதுபோலவே புனித ஜான் லியோனார்தியின் பணி வாழ்வு, பல எதிர்ப்புகளையும் கடந்து உண்மையை எடுத்துரைத்தன. இறை நம்பிக்கையையும், திருச்சபையில் புரையோடிக் கிடந்த நோய்களையும் ‘கிறிஸ்து’ என்னும் மருந்தினால் குணமாக்க இவர் செய்த தியாகங்களும் பின்னரே புரிந்து கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் இறை அன்னை சபை துவக்கப் பட்ட ஆண்டு: 1994 ஆம் ஆண்டு.

தமிழ் நாட்டில் உள்ள இச்சபையின் குருக்கள்: 41 அருட்பணியாளர்கள்

தமிழகத்தில் சபையின் தலைமையிடம்:

அருளகம்,

OMD இல்லம்,

சமயபுரம்,

திருச்சி - 621112.

குருத்துவ உருவாக்க இல்லங்கள்:

1. அருளகம்,

OMD இல்லம்,

சமயபுரம்,

திருச்சி - 621112.

Contact no: +91 7373985747

2. அமலகம்,

OMD இல்லம்,

ஊத்துப்பட்டி,

மதுரை - 625514.

Contact no: +919715713474

தமிழகத்தில் OMD சபையினர் பணிபுரியும் பங்குத்தளங்கள்:

1. இறையன்னை ஆலயம்,

பள்ளிவிடை பாலம்,

சமயபுரம்,

திருச்சி - 621114.

2. தூய பனிமய அன்னை ஆலயம்,

பட்டரிவிளை,

கன்னியாகுமரி - 629802.

3. புனித அந்தோணியார் ஆலயம்,

புதிய சானிப்பூண்டி,

திருவண்ணாமலை - 606735.

4. புனித அந்தோணியார் ஆலயம்,

வடக்கு செய்யூர்,

காஞ்சிபுரம் - 603302

5. நல்லாயன் ஆலயம்,

நல்லாயன்புரம்,

கன்னியாகுமரி - 629170.

OMD துறவற பயிற்சி: 

விருப்பநிலை: முதல் ஆண்டு (ஒரு வருடம்)

விருப்பநிலை: இரண்டாம் ஆண்டு (ஒரு வருடம்)

மெய்யியல் பட்டப் படிப்பு: மூன்று ஆண்டுகள்

நவதுறவு: ஓர் ஆண்டு

களப்பணி: ஓர் ஆண்டு

இறையியல் பட்டப் படிப்பு: மூன்றரை ஆண்டுகள்

திருத்தொண்டர்: களப்பணி

குருத்துவ அருள்பொழிவு:

புனித ஜான் லியோனார்தி யின் வழியில், நீங்களும் இறை அன்னை சபையின் துறவியாக மாறி இயேசு கிறிஸ்துவுக்கு சான்று பகர விருப்பமா.....!!! 

சபையின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: அருட்பணி. ஆரோக்கிய சிரில் அவர்கள்

தொடர்புக்கு: +91 94438 72650