402 புனித அந்தோணியார் ஆலயம், கடியபட்டணம்


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : கடியபட்டணம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : முட்டம்

பங்கு ஆலயம் : புனித பேதுரு பவுல் ஆலயம், கடியபட்டணம்.

பங்குத்தந்தை : அருட்பணி பபியான்ஸ்

இணை பங்குத்தந்தை : அருட்பணி நியூமன்

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு

செவ்வாய் மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் செவ்வாய் காலை 11.00 மணிக்கு ஜெபமாலை, நவநாள், சிறப்பு நற்கருணை ஆசீர்.

திருவிழா : ஜனவரி மாதம் இறுதியில் ஆரம்பித்து பெப்ரவரி மாதத் துவக்கத்தில் நிறைவடைகிற வகையில் 13 நாட்கள்.

பேருந்துகள் :

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து 14V.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து 14, 14A, 14B, 14C, 14F

மார்த்தாண்டத்திலிருந்து 46C.

தக்கலை 47A, 47C

குளச்சல் 5C, 302.

வரலாறு :

வரலாற்று சிறப்பு மிக்க கடியபட்டணம் புனித பேதுரு பவல் ஆலயத்தின், புனித அந்தோணியார் தெருவில், புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டு மக்கள் ஜெபித்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த குருசடி பழுது ஏற்பட்டதால், புதிய குருசடி கட்டுவதற்கு ஆயரிடம் அனுமதி கோரிய போது, மேதகு ஆயர் அவர்களின் ஆலோசனையின்படி குருசடியை ஆலயமாக கட்ட தீர்மானித்தனர்.

மக்களின் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய ஆலயத்திற்கு அருட்பணி உபால்டு அவர்களின் பணிக்காலத்தில், 26.01.2011 அன்று மண்ணின் மைந்தர் அருட்பணி டைனிஷியஸ் அவர்கள் அடிக்கல் அர்ச்சிக்க, திரு. நாசரேத் சார்லஸ் (மண்ணின் மைந்தர்) அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.

புனித அந்தோணியார் தெரு மக்களின் அயராத முயற்சியினால் அழகான இவ்வாலயம் கட்டப்பட்டு, இத்துடன் புதிய கொடிமரமும் வைக்கப்பட்டு 30.12.2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி பபியான்ஸ் பணிக்காலத்தில் அழகிய கெபி கட்டப்பட்டு 23.01.2019 அன்று அர்ச்சிக்கப் பட்டது. இந்த கெபியில் உள்ள புனித அந்தோணியார் சுரூபமானது 20 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.

பதுவை நகர் புனித அந்தோணியார் வழியாக எண்ணற்ற அதிசயங்கள் அற்புதங்கள் நாள்தோறும் நடந்து வருவது தனிச் சிறப்பு.

புதுமைகளில் சில...

1974 ம் ஆண்டில் தண்ணீர் தேவைக்காக இவ்வாலயத்தில் ஒரு கிணறு தோண்டப்பட்டது. நாள்தோறும் சிறிதளவு தண்ணீர் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் 2011 ம் ஆண்டில் புதிய ஆலயம் கட்ட துவங்கிய அன்றிலிருந்து தண்ணீர் மட்டம் அதிகரித்து இந்த மிகப்பெரிய ஆலய கட்டுமானப் பணிக்கான தண்ணீர் முழுவதும் இந்த கிணற்றிலிருந்து பெறப் பட்டது. புனிதர் நடத்திய முதல் அற்புதம்.

"இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், ' நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக! ' என்றார்." -மாற்கு 1:41

இந்த கிணற்று தண்ணீரை நோய் நீக்கும் அருமருந்து எனலாம். புற்று நோயினால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் இருந்து திரும்ப அனுப்பப் பட்டவர், இந்த புனித நீரை அருந்தி, நோய் நீங்கி பூரண நலம் பெற்றார்.

மேலும் புற்றுநோயால் அவதிப்பட்ட பலரும் இங்கு வந்து ஜெபித்து நலம் பெற்று வருகின்றனர்.

28 ஆண்டுகளாக பேய் பிடித்து துன்புற்றவர் இங்கு வந்து ஜெபித்து நலம் பெற்று சென்றார்.

குழந்தை வரம் வேண்டி பல தம்பதியர் இங்கு வந்து ஜெபித்து, குழந்தை வரம் கிடைத்ததை சாட்சியமாக பகிர்ந்துள்ளனர்.

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." -மத்தேயு 11:28 என்கிறார் நம் இறைவன். கடியபட்டணத்து இவ் அழகிய இறைவனின் இல்லத்தில் இவ்வாறு எண்ணற்ற புதுமைகள் நடந்து வருவதாலும், இவ்வாலயத்தின் அழகினைக் காணவும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் மக்கள் வருகை தந்து ஜெபித்து இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர்.

கடியபட்டணம் கடலுக்கு மிக அருகே, வீசியடிக்கும் அலைகளின் அழகில், கடற்கரையில் அமைந்து, அளவில்லாத புதுமைகளை வழங்கிக் கொண்டிருக்கும் கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு வாருங்கள்..! புதுமைகளை பெற்றுச் செல்லுங்கள்....